தாய்லாந்து மிஸ் ஹெரிடேஜ் அழகிப் போட்டி... ராமநாதபுரம் விவசாயி மகள் தேர்வு

தாய்லாந்தில் நடைபெற உள்ள சர்வதேச “மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் 2025” போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்ளும் பெருமை ஜோதிமலருக்கு கிடைத்துள்ளது.

தாய்லாந்தில் நடைபெற உள்ள சர்வதேச “மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் 2025” போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்ளும் பெருமை ஜோதிமலருக்கு கிடைத்துள்ளது.

author-image
WebDesk
New Update
Tailand Mh

ராமநாதபுரம் விவசாயியின் மகள் ஜோதிமலர் தாய்லாந்தில் நடைபெறும் “மிஸ்  ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் 2025” போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே தெற்கு காக்கூரைச் சேர்ந்த விவசாயி கஜேந்திர பிரபுவின் மகள் ஜோதிமலர் (28), தாய்லாந்தில் நவம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ள “மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் 2025” சர்வதேச அழகிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கத் தேர்வாகியுள்ளார். பி.டெக் பட்டம் பெற்ற ஜோதிமலர், தற்போது பெங்களூரில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருவதுடன், மாடலிங் துறையிலும் தன்னை நிலைநாட்டி வருகிறார்.

சமீபத்தில் புனேயில் நடைபெற்ற மிஸ் டூரிசம் அம்பாசடர் ஹெரிடேஜ் இந்தியா 2025 போட்டியில் 100க்கும் மேற்பட்ட போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளி ஜோதிமலர் வெற்றி பெற்றார்.இந்த வெற்றியின் அடிப்படையில், வரும் நவம்பர் 28ஆம் தேதி தாய்லாந்தில் நடைபெற உள்ள சர்வதேச “மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் 2025” போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்ளும் பெருமை ஜோதிமலருக்கு கிடைத்துள்ளது.

இது குறித்து ஜோதிமலர் கூறுகையில், தாய்லாந்தில் நடைபெறும் இப்போட்டி, உலக நாடுகளுக்கிடையிலான சுற்றுலா மற்றும் கலாச்சார பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது. இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் வளமான கலாச்சாரத்தை சர்வதேச மேடையில் வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி மற்றும் பெருமை அடைகிறேன் என்று கூறியுள்ளார்.

Advertisment
Advertisements
Tamil Lifestyle Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: