உலகப்புகழ் பெற்ற இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் உண்டியலில் பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.1 கோடியே 14 லட்சம் வருவாயாக கிடைத்துள்ளது.
பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட காணிக்கைகளால் கோவில்களில் உள்ள உண்டியல்கள் நிறைந்ததால் ஒரு மாதத்திற்கு பிறகு ராமநாதசுவாமி கோயில் இராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்மன், பஞ்சமூர்த்திகள் ஆகிய சன்னதியில் முன்புள்ள உண்டியல்கள் மற்றும் கோவிலுக்கு சொந்தமான உப கோவில்களில் உள்ள உண்டியல்கள் இணை ஆணையர் செல்லத்துரை முன்னிலையில் இன்று திறக்கப்பட்டது.
அதனை திருக்கோயில் கல்யாண மண்டபத்தில் இணை ஆணையர் செல்லத்துரை, முன்னிலையில் எண்ணப்பட்டது. இதில் ரொக்கப்பணம் ரூபாய் ஒரு கோடியே 14 லட்சத்தி 65 ஆயிரம் ரூபாய், தங்கம் 61 கிராம், வெள்ளி 3 கிலோ 200 கிராம், 51 வெளிநாட்டு ரூபாய்கள் காணிக்கையாக கிடைத்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள்,பக்தர்கள் தன்னார்வ தொண்டர்கள் பங்கேற்றனர்.