தந்தையின் மறைவு , தியேட்டர் வாசலில் வேலை: திரும்பி பார்க்க வைத்த பிக் பாஸ் ரம்யா பாண்டியன்!

திருநெல்வேலி பொண்ணான ரம்யா, முதன் முதலில் குறும்படங்களில் தான் நடிக்க தொடங்கினார்.

திருநெல்வேலி பொண்ணான ரம்யா, முதன் முதலில் குறும்படங்களில் தான் நடிக்க தொடங்கினார்.

author-image
WebDesk
New Update
Bigg Boss Ramya Pandian, Vijay TV Bigg Boss

ரம்யா பாண்டியன்

சமூக வலைத்தளங்களில் பல்வேறு நபர்கள் திடீரென்று பிரபலமடைந்து விடுகிறார்கள். அந்த வகையில் ஒரே ஒரு போட்டோ ஷூட் மூலம் சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங்கில் வந்தவர் நடிகை சமூக பாண்டியன். ஜோக்கர்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலக நடிகையாக அறிமுகம் ஆனார்.

Advertisment

கொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்

அதன் பின்பு, தன்னுடைய நடிப்புத் திறனால் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்த ரம்யா, சமுத்திரகனிக்கு ஜோடியாக “ஆண்தேவதை” என்ற படத்திலும் நடித்திருந்தார். இருந்த போதும் ரம்யா பாண்டியனுக்கு மிகப் பெரிய வாய்ப்பை கொடுத்தது மொட்டை மாடியில் அவர் நடத்திய ஃபோட்டோ ஷூட் தான்.

பின்பு, ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சியின் சமையல் போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்க ரம்யாவுக்கு விஜய் டிவி வாய்ப்பு வழங்கியது.

Advertisment
Advertisements

இந்த நிகழ்ச்சியின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார் ரம்யா பாண்டியன். நிகழ்ச்சியின் இடையிடையே அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி விதம் விதமான புகைப்படங்களை சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து வந்தார். அதுமட்டுமில்லை ரம்யா பாண்டியனுக்கு நடிகர் விஜய் தான் மிகவும் பிடித்தமான நடிகர்.

திருநெல்வேலி பொண்ணான ரம்யா, முதன் முதலில் குறும்படங்களில் தான் நடிக்க தொடங்கினார். குறும்படங்களுக்கு பிறகு சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கின. தனது வீட்டு மொட்டை மாடியில் தோட்டமே பயிருட்டு அதை பாதுக்காத்து வருவது தான் ரம்யாவின் மிகப் பெரிய ஹாபி. பேஷனில் ரம்யாவின் செலக்‌ஷன் எப்போதுமே சூப்பர் தான். அவரின் உடைகளின் தேர்வு கூட மிகவும் வித்யாசமானதாக இருக்கும்.

குத் வித் கோமாளியில் அடைந்த புகழ் பிக் பாஸ் வரை ரம்யாவை அழைத்து சென்றுள்ளது. ரம்யா பாண்டியனும் தான் கடந்து வந்த பாதையைப் பற்றி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசினார்.

ரூ2,500- 3,000 விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்: இது ஜியோவை தவிர வேற யாரா இருக்கும்?

அப்போது அவர் தான் நடிக்க வரும் முன்பு செய்த வேலையைப் பற்றியும் பேசியிருக்கிறார். சென்னை சத்யம் தியேட்டர் முன்பு மக்களுக்கு நோட்டீஸ் (Phamplet) வழங்கும் வேலையைத் தான் அவர் முதலில் செய்தாராம். கல்லூரி படிக்கும் காலங்களில் பாக்கெட் மணிக்காக இதை அவர் செய்திருக்கிறார். முதல் நாளில் அந்த வேலையை செய்வதற்கு மிகவும் கூச்சமாக இருந்தாலும், இரண்டாவது நாள் அது பற்றி வெட்கப்படாமல் செய்யத் துவங்கினாராம். செய்யும் வேலைக்கு தான் சம்பளம் வாங்குகிறோம் என நினைத்து அதை செய்ததாக தெரிவித்திருக்கிறார். அதைக் கேட்டு அவரது ரசிகர்கள் உட்பட பலரும் ஷாக் ஆகி இருக்கிறார்கள்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Bigg Boss Tamil Bigg Boss

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: