இப்படி ரசகுல்லா செய்தால், மிகவும் சுவையா இருக்கும். ஒரு முறை டிரைபண்ணுங்க.
தேவையான பொருட்கள்
பால் – 2 லிட்டர்
3 எலுமிச்சை பழ சாறு
சர்க்கரை- 400 கிராம்
2 லிட்டர் தண்ணீர்
ஏலக்காய் 4 இடித்தது
செய்முறை : பாலை நன்றாக கொதிக்க வைக்கவும். தொடர்ந்து தீயை மிதமாக வைத்துவிட்டு, அதில் எலுமிச்சை சாறு பிழிய வேண்டும். அப்போது பால் திரியும். இதைத்தொடர்ந்து ஒரு வெள்ளை துணியில் பாலை வடிகட்டவும். தொடர்ந்து எல்லா நீரையும் பிழிந்து எடுக்கவும். ஒரு முறை அந்த பன்னீரை கழுவிக்கொள்ளவும். தொடர்ந்து வெள்ளை துணியில் இதை கட்டிவைக்கவும். சுமார் 1 மணி நேரம் அப்படியே இருக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து, சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்கவும். நாம் செய்து வைத்த பன்னீரை 10 நிமிடங்கள் பிசைய வேண்டும். தொடர்ந்து சிறிய உருண்டைகளாக மாற்றவும் . தற்போது தீயை குறைத்து, சர்க்கரை பாகில் சேர்க்கவும். 10 நிமிடங்கள் அதிக தீயில் வைக்கவும். தொடர்ந்து 6 நிமிடங்கள் மிதமான தீயில் வைக்கவும். தொடர்ந்து ஏலக்காய் இடித்ததை சேர்க்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“