செம்ம சுவையான ரசப் பொடி மிக்ஸ். இதை செய்து வைத்துகொண்டால் தேவைப்படும் நேரத்தில் ரசம் வைக்கலாம்.
தேவையான பொருட்கள்
1 கப் துவரம் பருப்பு
அரை கப் தனியா
அரை கப் சீரகம்
அரை கப் மிளகு
1 டேபிள் ஸ்பூன் உப்பு
8 வர மிளகாய்
1 டேபிள் ஸ்பூன் பெருங்காயம்
100 கிராம் புளி
1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
1 ஸ்பூன் கடுகு
2 கொத்து கருவேப்பிலை
செய்முறை: ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பை சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும். இப்படி தனியா, சீரகம் , மிளகு, உப்பு, வர மிளகாய், பெருங்காயம் உப்பு ஆகியவற்றை நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைத்துகொள்ளுங்கள். இவை அனைத்துடன் மஞ்சள் பொடி சேர்த்து கிளரவும், கொஞ்சம் வறுக்கவும். தொடர்ந்து இதை மிக்ஸியில் சேர்க்கவும். தொடர்ந்து கருவேப்பிலை, கடுகு ஆகியவற்றை தனியாக வறுத்து இதையும் மிக்ஸியில் சேர்த்து பொடித்து கொள்ளவும். இரண்டு மூன்று தடவை பொடித்து கொண்டு, இதை சலித்து கொள்ள வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“