சுவையான இளநீர் ரசம் எப்படி செய்வது என்பதை பாருங்கள்
Advertisment
ரசப் பொடி செய்ய தேவையான பொருட்கள்
சீரகம்- 100 கிராம்
சோம்பு- 75 கிராம்
மிளகு- 75 கிராம்
வெந்தயம்- ஒரு ஸ்பூன்
நாட்டு மல்லி- 50 கிராம்
காய்ந்த மிளகாய்- 15
அடுப்பில் கடாய் வைத்து மேலே சொன்ன அனைத்தையும் அதில் சேர்த்து நன்கு வறுத்து, பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ரசம் செய்ய தேவையான பொருட்கள்
நாட்டுத் தக்காளி
கல் உப்பு
இடித்த பூண்டு
பச்சை மிளகாய்
பச்சைப் புளி
எப்படி செய்வது?
தேவையான அளவு நாட்டுத் தக்காளி எடுத்து அதன் காம்பு பகுதியை நீக்கி வெட்டவும். அதனுடன் கல் உப்பு, இடித்த பூண்டு, பச்சை மிளகாய், பச்சைப் புளி சேர்த்து நன்கு கரைக்கவும்.
இதில் 2 ½ ஸ்பூன் மஞ்சள், வறுத்து இடித்த ரசப் பொடி, நிறைய மல்லி தழை சேர்க்கவும்.
அடுப்பில் கடாய் வைத்து சூடானதும், தயார் செய்த கரைசலை அப்படியே கடாயில் சேர்க்கவும். இதில் இளநீரை சேர்க்கவும்.
10 இளநீருக்கு, 1 வழுக்கை எனும் கணக்கில் 40 இளநீருக்கு 4 வழுக்கை சேர்க்க வேண்டும். ஒருவேளை நீங்கள் கொஞ்சமாக ரசம் வைத்தால் அதில் ருசிக்கு மட்டும் சிறிது வழுக்கை சேர்த்துக் கொள்ளலாம்.
ரசம் நுரை கட்டியதும் அடுப்பை அணைத்து விடவும்.
தாளிப்பு
அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, காஷ்மீர் குங்குமப்பூ போட்டு தாளிக்கவும். இதை அப்படியே ரசத்தில் ஊற்றவும்.
சுவையான இளநீர் ரசம் தயார்.
இதில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால், கீழே உள்ள World Food Tube யூடியூப் சேனல் வீடியோ பாருங்க
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“