உங்கள் வீட்டில் எலி, பல்லி, கரப்பான்பூச்சி தொல்லை அதிகமாக இருக்கிறதா? சிங் அடியிலும், சமையலறையிலும், கார் பார்க்கிங்கிலும் இவை அட்டகாசம் செய்கின்றனவா? பலரும் எலி, கரப்பான்பூச்சி தொல்லைக்கு கடைகளில் விஷ மருந்து வாங்கிப் பயன்படுத்துவார்கள். ஆனால், அந்த விஷ மருந்துகள் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்றவை. இனி கவலை வேண்டாம்! வெறும் தேயிலைத் தூளை வைத்து, இந்த பிரச்சனைகளை ஒரே நாளில் வீட்டிலிருந்து விரட்டலாம்!
டீத்தூள் உருண்டைகள் தயாரிக்கும் முறை (கரப்பான்பூச்சி மற்றும் பல்லிக்கு)
Advertisment
Advertisements
ஒரு கிண்ணத்தில் 4-5 ஸ்பூன் டீத்தூள் எடுத்துக் கொள்ளவும். அத்துடன் ஒரு ஸ்பூன் டூத் பேஸ்ட் , ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா, மற்றும் ஒரு ஸ்பூன் பேக்கிங் பவுடர் சேர்த்து, அனைத்தையும் உங்கள் கைகளால் நன்கு கலக்கவும். டூத்பேஸ்ட் சேர்ப்பதால் உருண்டைகள் பிடிக்க எளிதாக வரும்.
இந்த கலவையை சிறிய உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும். டீத்தூளின் வாசம் கரப்பான்பூச்சி மற்றும் பல்லிகளை ஈர்க்கும். டூத்பேஸ்ட், சமையல் சோடா மற்றும் பேக்கிங் பவுடரில் உள்ள பொருட்கள் அவற்றின் செரிமான மண்டலத்தைப் பாதித்து, அவை இடத்தை விட்டுச் செல்ல உதவும்.
உருண்டைகளைப் பயன்படுத்தும் இடங்கள்
சமையலறை: சமையலறை சிங்க் அடியிலும், சமையல் கவுண்டர் டாப்பிலும், சமையல் பாத்திரங்கள் அடுக்கி வைத்துள்ள செல்ஃப்களிலும், மளிகைப் பொருட்கள் உள்ள கபோர்டுகளிலும் இந்த உருண்டைகளை ஆங்காங்கே போட்டு விடலாம். குளியலறையில் துர்நாற்றம் அடித்தால், இந்த உருண்டை அந்த துர்நாற்றத்தையும் உறிஞ்சிவிடும். ஓட்டைகள் வழியாக பூரான், கரப்பான்பூச்சி தொல்லை வந்தால், அதையும் இது சூப்பராகக் கட்டுப்படுத்துகிறது.
எலிகளை விரட்ட கோதுமை மாவு உருண்டைகள்
எலிகள் வீடுகளுக்குள் நுழைந்து பெரும் தொல்லையை உண்டாக்கும். புத்தகங்கள், முக்கிய ஆவணங்கள் மற்றும் கார் வயர்கள் போன்றவற்றை சேதப்படுத்தும். இந்த கோதுமை மாவு உருண்டைகள் எலிகளை விரட்ட உதவும்.
தயாரிக்கும் முறை:
மேலே தயார் செய்த டீத்தூள் கலவை சிறிது மீதம் இருந்தால், அதை ஒரு கிண்ணத்தில் எடுத்து, அதில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து, ஒரு மணி நேரம் அப்படியே விடவும். இதனால் பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் மற்றும் டூத்பேஸ்ட் நன்கு வினைபுரியும்.
ஒரு பாத்திரத்தில் 4 ஸ்பூன் கோதுமை மாவு எடுத்துக் கொள்ளவும். பழைய அல்லது பூச்சி விழுந்த கோதுமை மாவையும் பயன்படுத்தலாம்.
ஒரு மணி நேரம் ஊறிய டீத்தூள் கலந்த தண்ணீரை சிறிது சிறிதாக கோதுமை மாவுடன் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மீதமுள்ள தண்ணீரையும் பயன்படுத்தலாம்.
பிசைந்த மாவில் இருந்து சிறிய உருண்டைகளைத் தயாரிக்கவும்.
இந்த கோதுமை மாவு உருண்டையின் நடுவில், நாம் முதலில் தயாரித்த டீத்தூள் கலந்த சிறிய உருண்டையை வைத்து நன்கு மூடி, மீண்டும் ஒரு பெரிய உருண்டையாகப் பிடித்துக் கொள்ளவும்.
பயன்படுத்தும் இடங்கள்:
எலிகள் நுழையும் இடங்கள், குறிப்பாக கார் பார்க்கிங் பகுதிகள், கிச்சன், வீட்டு வாசல் போன்ற இடங்களில் இந்த உருண்டைகளை வைக்கலாம்.
கோதுமை மாவின் வாசம் எலிகளை ஈர்க்கும், உள்ளே உள்ள டீத்தூள் கலந்த மருந்து எலிகளின் செரிமான மண்டலத்தைப் பாதித்து, அவை மீண்டும் உங்கள் வீட்டுப் பக்கம் வராமல் தடுக்கும். இந்த உருண்டைகள் 2-3 நாட்கள் வரை பயனுள்ளதாக இருக்கும்.
டீத்தூள் ஸ்ப்ரே (எலி, பல்லி, கரப்பான்பூச்சிக்கு)
உருண்டைகள் தயாரிக்க நேரம் இல்லாதவர்களுக்கு, டீத்தூள் கலந்த இந்த ஸ்ப்ரே சிறந்த தீர்வாகும்.
தயாரிக்கும் முறை:
மேலே தயார் செய்த டீத்தூள் கலந்த நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
வடிகட்டிய நீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அல்லது கூல் ட்ரிங்க்ஸ் பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை:
எலி, பல்லி, கரப்பான்பூச்சி நடமாட்டம் உள்ள இடங்களில் இந்த ஸ்ப்ரேவை நேரடியாக தெளிக்கலாம். குறிப்பாக இரவு தூங்கச் செல்லும் முன், சமையலறை மேடை, அலமாரிகள், சிங்க் அடியில், வாசல் பகுதிகள், கார் பார்க்கிங் போன்ற இடங்களில் தெளிக்கலாம்.
இந்த ஸ்ப்ரே பூச்சிகளை விரட்டி, உங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருக்க உதவும். இந்த எளிய மற்றும் பாதுகாப்பான முறைகளைப் பயன்படுத்தி உங்கள் வீட்டில் உள்ள பூச்சி தொல்லையிலிருந்து விடுபடலாம்.