வழக்கமான இட்லி போல் இல்லாமல் இந்த கருப்பட்டி இட்லி அதிக சுவையாக இருக்கும். செய்வதற்கும் ரொம்ப ஈசி.
தேவையான பொருட்கள்
புழுங்கலரிசி- 2கப்
உளுந்தம் பருப்பு- 1 கப்
தூளாக்கிய கருப்பட்டி- அரை கப்
ஏலக்காய்த்தூள்
தேங்காய் துருவல்- அரை மூடி
நெய்
ஆப்பசோடா
செய்முறை : அரிசி, உளுந்தை தனித்தனியாக ஊற வைத்துக்கொள்ள வேண்டும். உளுந்தை உபரி வரும்வரை அரைத்துகொள்ள வேண்டும். அரிசியை நன்றாக உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த மாவு புளித்ததும், தேங்காய் துருவல், நெய், ஏலக்காய்தூள், ஆப்பசோடா சேர்க்கவும். கருப்படியை கால் கப் தண்ணீர் வைத்து கரையவிட்டு, வடிகட்டி, சூடாக அப்படியே மாவில் சேருங்கள். இதை நன்றாக கலந்து இட்லியாக ஊற்ற வேண்டும்.