செஃப் சஞ்சீவ் கபூரின் இன்ஸ்டாகிராம் கணக்கு சுவையான ரெசிபிகள் மட்டுமல்ல பயனுள்ள சமையல் குறிப்புகளும் நிறைந்தது.
மிளகாய் விதைகளைப் பயன்படுத்தி, வீட்டிலேயே சொந்தமாக மிளகாய்ச் செடியை எப்படி வளர்ப்பது என்பது குறித்து செஃப் சஞ்சீவ் கபூர் பகிர்ந்து கொண்டார்.
உங்களிடம் மீதமிருக்கும் மிளகாய் விதைகளை மண்ணில் விதைத்து வளர விடுங்கள். தொடர்ந்து தண்ணீர் ஊற்றவும். இன்னும் சில மாதங்களில் மிளகாய் செடி காய்க்கும்.
ஆர்கானிக் உரம்
மிளகாய் விதைகள் ஆர்கானிக், அதை உரக்குவியல் அல்லது தொட்டியில் சேர்க்கலாம். உரமாக்கல் என்பது இயற்கையான செயல்முறையாகும், இது கரிம கழிவுகளை ஊட்டச்சத்து நிறைந்த மண்ணாக மாற்றுகிறது.
விதைகள் காலப்போக்கில் உடைந்து, உரத்தின் வளத்திற்கு பங்களிக்கும், என்று செஃப் அந்த வீடியோவில் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“