டிக் டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக செயல்பட்டுவந்தவர் டான்ஸர் ரமேஷ். 42 வயதான இவருக்கு சித்ரா, இன்ப வள்ளி என இரு மனைவிகள் உள்ளனர்.
ரமேஷ் கடந்த டிசம்பரில் இருந்து இன்பவள்ளியுடன் புளியந்தோப்பு கேபி பார்க்கில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை (ஜன.27) தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், வீட்டின் 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதற்கிடையில் ரமேஷ் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை. இது கொலை என அவரது முதல் மனைவி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதற்கிடையில், ரமேஷின் பெரியப்பா மகன் ஒருவர் அளித்த பேட்டியில், “எங்கள் அண்ணன் ஒரு குழந்தை மாதிரி. அவரு தற்கொலையெல்லாம் பண்ணிக்கிற ஆளு இல்ல. அன்றைய தினம் அவருக்கு பிறந்த நாள் என்பதால், சித்ரா அண்ணி மற்றும் குழந்தைகளை பார்க்க எண்ணியிருப்பார்.
அப்போது, அவரது இரண்டாவது மனைவியுடன் நடந்த வாக்குவாதத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம். அவர் குதித்ததை யாரும் பார்க்கவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/