முகப்பொலிவு, கருவளையத்துக்கு‌ குட்பை... உருளை இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க!

தூங்கச் செல்லும் முன் சிறிதளவு உருளைக்கிழங்கு சாறை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இதை தொடர்ந்து செய்து வந்தால், கருவளையங்கள் மெல்ல மறைந்து முகம் ஒளிவீசும்.

தூங்கச் செல்லும் முன் சிறிதளவு உருளைக்கிழங்கு சாறை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இதை தொடர்ந்து செய்து வந்தால், கருவளையங்கள் மெல்ல மறைந்து முகம் ஒளிவீசும்.

author-image
Mona Pachake
New Update
download (23)

அழகை பராமரிக்க இன்று பலரும் வெளிநாட்டு க்ரீம்கள், ரசாயனப் பொருட்கள் என பலவிதமான பொருட்களை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், இயற்கையாகவும், எளிதாகவும் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க நம் சமையலறையில் உள்ள சில பொருட்களே போதுமானவை. அவற்றில் முக்கியமானது — உருளைக்கிழங்கு.

Advertisment

உருளைக்கிழங்கு சமையலில் இன்றியமையாத ஒன்றாக இருந்தாலும், இது அழகுக்கலையிலும் அதே அளவு முக்கியத்துவம் பெறுகிறது. முகத்தில் உள்ள கருவளையம், தழும்புகள், வறட்சி போன்றவற்றை நீக்கி, சருமத்தை மென்மையாகவும் பிரகாசமாகவும் மாற்றும் திறன் இதில் உள்ளது.

அழகுக்கலை நிபுணர்கள் கூறுவதாவது — உருளைக்கிழங்கில் உள்ள அசெலிக் அமிலம் (Azelaic Acid) இயற்கையான பளபளப்பூட்டியாக செயல்பட்டு, சருமத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதனால் முகம் சீராக மிருதுவாகி, கருவளையம் குறையும்.

வீட்டிலேயே தயாரிக்கும் உருளைக்கிழங்கு ஃபேஸ் மாஸ்க்:

  • முதலில் உருளைக்கிழங்கை நன்றாக கழுவி, தோலை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கவும்.
  • இவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு, அதனுடன் மாதுளை முத்துக்கள் கால் கப் சேர்த்து நைஸாக அரைக்கவும்.
  • தண்ணீர் சேர்க்க வேண்டாம்; பேஸ்ட் கடினமாக இருந்தால் சிறிது பால் அல்லது கெட்டித்தயிர் சேர்க்கலாம்.
  • உங்கள் சருமம் எண்ணெய்ப்பசையாக இருந்தால், சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்க்கவும்.
  • இந்த கலவையை ஃப்ரிட்ஜில் அரைமணி நேரம் வைத்துப் பின் முகத்தில் வட்டமாக மசாஜ் செய்வது போல கீழிருந்து மேலாக தடவவும்.
  • சுமார் 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.
Advertisment
Advertisements

இதன் பின் முகம் மென்மையாகவும் பிரகாசமாகவும் மாறும். கருப்புக் கறைகள் வெளியில் தெரியாது.

இரவில் செய்யக்கூடிய உருளைக்கிழங்கு ஜூஸ் ட்ரீட்மெண்ட்:

தூங்கச் செல்லும் முன் சிறிதளவு உருளைக்கிழங்கு சாறை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இதை தொடர்ந்து செய்து வந்தால், கருவளையங்கள் மெல்ல மறைந்து முகம் ஒளிவீசும். மேலும் இது ஆழ்ந்த தூக்கத்திற்கும் உதவுகிறது.

நிபுணர்கள் கூறுவதாவது, இந்த இயற்கையான முறை எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாததால், அனைத்து வயதினரும் பயமின்றி இதனைப் பயன்படுத்தலாம்.

சமையலறையில் இருக்கும் உருளைக்கிழங்கே இப்போது அழகுக்கான இயற்கை மருந்தாக மாறியுள்ளது!

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: