/indian-express-tamil/media/media_files/2025/06/08/TlNyK4vyKunTB2yavU90.jpg)
தயிர், அரிசி மாவுடன் இதை சேர்த்து அப்ளை பண்ணுங்க… சருமம் பளபளக்கும்!
பொலிவான சருமம் என்பது ஒரே நாளில் மேஜிக் போன்று அமைந்து விடாது. இதற்காக தினசரி சிறிது நேரம் ஒதுக்கி சரும பராமரிப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும். இதன் தொடர்ச்சியான பலன்தான் ஆரோக்கியம் என்ற வடிவத்தில் நமது சருமத்திற்கு கிடைக்கும். சரும பராமரிப்பு என்று கூறியதும் நிறைய பணம் செலவளித்து ஃபேஸ் க்ரீம், சீரம் மற்றும் டோனர் போன்ற பொருட்களை வாங்க வேண்டும் என்று சிலர் கருதுவார்கள். தங்களுடைய தேவைக்கு ஏற்ற மாதிரி இந்தப் பொருட்களை பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்.
ஆனால், இந்த பொருட்களில் ரசாயனங்கள் சேர்ந்திருப்பதால், அதன் மூலம் ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகள் ஏற்படக் கூடுமோ என்ற தயக்கம் நிறைய பேருக்கு இருக்கும். இதற்காக இயற்கையான முறையில் ஃபேஸ்பேக் தயாரித்து பயன்படுத்தலாம் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் இயற்கையான ஃபேஸ்பேக் தயாரிக்க சில பொருட்கள் மட்டும் இருந்தால் போதும். நம் முகத்திற்கு தேவையான அளவிற்கு அரிசி மாவு, கால் டீஸ்பூன் மஞ்சள், 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் நம் முகத்திற்கு தேவையான ஃபேஸ்பேக் தயாராகி விடும். இதனை முகத்தில் தடவி விட்டு சுமார் 10 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இப்படி தொடர்ச்சியாக செய்யும் போது நம்முடைய முகம் பார்ப்பதற்கு பொலிவாகவும், இளமையாகவும் காட்சியளிக்கும்.
பொறுப்பு துறப்பு:இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.