Advertisment

வெள்ளைப்படுதல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உணர்வு: ஆயுர்வேத நிபுணர் சொல்லும் தீர்வு

வெள்ளைப்படுதலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நோயாளிக்கும் இதை நான் பரிந்துரைக்கிறேன். இது அற்புதமான முடிவுகளைத் தருகிறது.

author-image
WebDesk
New Update
ayurvedic remedy for UTI

Ayurvedic remedy for UTI

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்த அரிசி நீர், சிறுநீரகத் தொற்று, வெள்ளைப்படுதல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் போன்றவற்றுக்கு ஒரு அற்புதமான தீர்வு என்பது உங்களுக்குத் தெரியுமா?

Advertisment

ஆயுர்வேதத்தில் தண்டுலோடகா (Tandulodaka) என்று அழைக்கப்படும் அரிசி நீர் மாவுச்சத்து நிறைந்தது. மேலும் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் பல்வேறு முக்கியமான ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டுள்ளது. நாள் முழுவதும் அரிசி நீர் பருகுவது உடலுக்கு மிகவும் நல்லது, என்று ஆயுர்வேத மருத்துவர் டிக்ஸா பாவ்சர் சவாலியா இன்ஸ்டாகிராமில் கூறினார்.

வெள்ளைப்படுதலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நோயாளிக்கும் இதை நான் பரிந்துரைக்கிறேன். இது அற்புதமான முடிவுகளைத் தருகிறது.

அரிசி நீர் இயற்கையில் குளிர்ச்சியானது, இதன் மூலம் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உணர்வு, வயிற்றுப்போக்கு, ரத்தப்போக்கு கோளாறுகள் மற்றும் அதிக மாதவிடாய் ஆகியவற்றிற்கு உதவுகிறது. மேலும், உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்களில் எரியும் உணர்வைக் குறைக்கிறது.

இருப்பினும், இருமல் மற்றும் சளியால் பாதிக்கப்படுபவர்கள் அதைத் தவிர்க்க வேண்டும் என்று டிக்சா பரிந்துரைத்தார்.

இந்த நன்மைகளைத் தவிர, அரிசி நீரில் பல தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை சருமத்திற்கு அதிசயங்களைச் செய்கின்றன.

மருத்துவர் டிக்சாவின் கூற்றுப்படி, இது உயிரணு வளர்ச்சியை ஊக்குவிக்கும், வயதான செயல்முறையை தாமதப்படுத்தும் மற்றும் ரத்த ஓட்டத்தைத் தூண்டும் இனோசிட்டால் என்ற கலவையைக் கொண்டுள்ளது.

அரிசி நீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது சருமத்துக்கு ஈரப்பதமூட்டும். மேலும் புற ஊதா கதிர்களை உறிஞ்சும் பண்புகளைக் கொண்டுள்ளது, இது சருமத் துளைகளை இறுக்குகிறது. பிக்மென்டேஷன் மற்றும் ஏஜ் ஸ்பாட்ஸ் வராமல் தடுக்கிறது.

Rice Water

அரிசி நீர் தயாரிப்பது எப்படி?

10 கிராம் அரிசியை எடுத்து ஒரு முறை கழுவவும். இப்போது அதனுடன் 60- 80 மில்லி தண்ணீரைச் சேர்த்து மண் பானை / ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கிண்ணத்தில் 2-6 மணி நேரம் மூடி வைக்கவும். பின்னர் அரிசியை, அதே தண்ணீரில் 2 - 3 நிமிடங்கள் மசிக்கவும். இப்போது வடிகட்டவும். அது பயன்படுத்த தயாராக உள்ளது.

எந்த அரிசியில் செய்யலாம்?

எந்த அரிசியைப் பயன்படுத்தினாலும் நல்லது. உடைத்த அரிசியும் நன்றாக இருக்கும். இருப்பினும், சிவப்பு அரிசி சிறந்தது மற்றும் ஒரு வருடம் பழமையான அரிசி மிகவும் நல்லது.

வெள்ளை அரிசியையும் பயன்படுத்தலாம். பச்சை அரிசி பாலிஷ் செய்யாமல், வேகவைக்காமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment