/tamil-ie/media/media_files/uploads/2021/06/greentea_ts_1200.jpg)
கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவை கடுமையாக பாதித்து வருகிறது. கொரோனாவை எதிர்க்க இந்த உணவை சாப்பிடுங்கள், அதை சாப்பிடுங்கள் என்று தினசரி நிறைய தகவல்கள் நமக்கு கிடைக்கிறது. ஆனால் அவற்றிற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. ஆனால் பல பண்டைய சிகிச்சைகள் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவக்கூடும், இது உங்கள் உடலின் மீட்பு வேகத்தை துரிதப்படுத்தும்.
ஆர்.எஸ்.சி அட்வான்ஸஸ் இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில், கொரோனா நோய்த்தொற்றைக் கையாள்வதில் கிரீன் டீ முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆய்வு முடிவை இந்திய வல்லுநர்களும் ஆராய்ந்து வருகின்றனர்.
ஆரம்ப கண்டுபிடிப்புகள் கிரீன் டீயில் உள்ள ஒரு பொருள் கொரோனாவுக்கு பின்னால் உள்ள கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடக்கூடும் என்று கூறப்பட்டது. கிரீன் டீயில் உள்ள அந்த பொருள் கலோகாடெசின். உடலுக்கு சுறுசுறுப்பை அளிக்கக் கூடிய கிரீன் டீ உடனடியாக கிடைக்கக்கூடியது, எளிதில் அணுகக்கூடியது மற்றும் மலிவு விலையில் கிடைக்கும்
இயற்கையின் பழமையான மருந்துகள் எப்போதுமே இதுபோன்ற தொற்று நோய்களுக்கு தீர்வாக இருந்து வருகிறது. எனவே தற்போது கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு கிரீன் டீயில் உள்ள கலோகாடெசின் உதவக் கூடுமா என்று கேள்வி எழுந்தது. ஆர்.எஸ்.சி அட்வான்சஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், இதற்கான ஆராய்ச்சி இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கலோகாடெசின், கோவிட் -19 ஐத் தடுப்பதற்கோ அல்லது சிகிச்சையளிப்பதற்கோ மருத்துவ ரீதியாக பயனுள்ளதாகவும் பாதுகாப்பானதாகவும் நிரூபிக்க முடியுமா என்பதைக் காட்ட இப்போது கூடுதல் ஆராய்ச்சிகள் தேவை.
இந்த கலோகாடெசின் பற்றிய ஆய்வுகள், பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு வழிவகுப்பதாகவும் மற்றும் தொற்று நோய்களுக்கு எதிரான போராட்டத்தில் இயற்கை பொருட்கள் எப்போதும் முக்கிய ஆதாரமாக இருக்கின்றன என்பதை நிரூபிக்கிற வகையிலும் உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us