/indian-express-tamil/media/media_files/2025/04/28/Cp6UjEkDie8foYvcKN7J.jpg)
பொதுவாகவே பூக்கள் மீது எல்லோருக்கும் ஒரு விருப்பம் இருக்கும். அதிலும், குறிப்பாக ரோஜாச் செடி என்றால் பலருக்கும் பிரியமாக இருக்கும். சிவப்பு, பிங்க், மஞ்சள் என்று பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் ரோஜாவைப் பார்ப்பதற்கு மனதிற்கு இதமாக இருக்கும்.
இதன் காரணத்தினால் தங்கள் வீட்டில் ரோஜாச் செடி வளர்க்க வேண்டும் என்று பலர் ஆசைப்படுவார்கள். தங்களுக்கு இருக்கும் சிறிய இடத்தில் ஒரு தொட்டியிலாவது ரோஜாச் செடி வளர்த்து பராமரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர்.
எனினும், வீட்டில் வளர்க்கும் ரோஜாச் செடியில் அதிகமாக பூக்கள் பூப்பது இல்லை என்று கூறுபவர்கள் இருக்கின்றனர். இதற்காக உரத்தை சரியான முறையில் போட்டு, சீராக பராமரித்தால் செடியில் அதிகளவிலான ரோஜா பூக்கள் பூக்கத் தொடங்கும்.
அந்த வகையில், வீட்டில் இருக்கும் ரோஜாச் செடிக்கு எப்படி உரம் போடுவது என்று தற்போது பார்க்கலாம். இதற்காக ஃப்ரெஷ்ஷான டீத்தூள் இருந்தால் போதுமானது. அதன்படி, பெரிய ரோஜாச் செடியாக இருந்தால் ஒரு ஸ்பூன் டீத்தூள் எடுத்து, செடி இருக்கும் மண்ணைக் கிளறி அதன் அடிப்பகுதியில் போட வேண்டும்.
சிறிய செடியாக இருந்தால் இதற்கு அரை ஸ்பூன் போதுமானதாக இருக்கும். இந்த டீத்தூள் உரத்தை மாதத்திற்கு ஒரு முறை போட்டால் போதும். இவ்வாறு தொடர்ச்சியாக செய்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வந்தால், பூக்காத செடியில் கூட ரோஜாப் பூக்கள் பூத்துக் குலுங்கும்.
நன்றி - Organic gardening tips Youtube Channel
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.