வெந்தயத்தை ஊறவைத்து இப்படி யூஸ் பண்ணுங்க… ரோஜா செடி தாறுமாறா பூக்கும்!
வீட்டில் ரோஜா செடியை வளர்த்தால் பூ பூக்காமல், செடி வளமாக இருப்பதைப் பார்த்து பலரும் வருத்தப்படுகிறார்கள். உங்களுக்கு ஒரு சூப்பர் டிப்ஸ், வெந்தயத்தை ஊறவைத்து இப்படி யூஸ் பண்ணுங்க ரோஜா செடி தாறுமாறா பூக்கும்.
வீட்டில் ரோஜா செடியை வளர்த்தால் பூ பூக்காமல், செடி வளமாக இருப்பதைப் பார்த்து பலரும் வருத்தப்படுகிறார்கள். உங்களுக்கு ஒரு சூப்பர் டிப்ஸ், வெந்தயத்தை ஊறவைத்து இப்படி யூஸ் பண்ணுங்க ரோஜா செடி தாறுமாறா பூக்கும்.
ரோஜா செடி, பல நேரங்களில் பூ பூக்காமல், செடியும் வளமாக இல்லாமல் இருக்கும். அப்போது என்ன செய்வது என்று தெரியாமல் கவலைப்படுவார்கள். உக்களுக்காகவே, பூகார்டன்10 (@boogarden10) என்ற யூடியூப் சேனலில் வெந்தயத்தை ஊறவைத்து உரமாக கொடுக்கும் ஒரு சூப்பரான டிப்ஸ் தருகிறார்கள்.
வீடுகளில் செடிகளை வளர்க்க பலருக்கும் பிடிக்கும். அதிலும் ரோஜா செடியை வளர்க்க ரொம்பவே பிடிக்கும். ரோஜாவை யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால், வீட்டில் ரோஜா செடியை வளர்த்தால் பூ பூக்காமல், செடி வளமாக இருப்பதைப் பார்த்து பலரும் வருத்தப்படுகிறார்கள். உங்களுக்கு ஒரு சூப்பர் டிப்ஸ், வெந்தயத்தை ஊறவைத்து இப்படி யூஸ் பண்ணுங்க ரோஜா செடி தாறுமாறா பூக்கும்.
Advertisment
ரோஜா செடியை வளர்ப்பது பலருக்கும் பிடித்தமான ஒன்று. அப்படி வளர்க்கிற ரோஜா செடி, பல நேரங்களில் பூ பூக்காமல், செடியும் வளமாக இல்லாமல் இருக்கும். அப்போது என்ன செய்வது என்று தெரியாமல் கவலைப்படுவார்கள். உக்களுக்காகவே, பூகார்டன்10 (@boogarden10) என்ற யூடியூப் சேனலில் வெந்தயத்தை ஊறவைத்து உரமாக கொடுக்கும் ஒரு சூப்பரான டிப்ஸ் தருகிறார்கள்.
உங்கள் வீட்டில் ரோஜா செடி தாறுமாறா பூக்க வேண்டுமா, அப்படியானால் இதை செய்யுங்கள். முதலில் 2 கைப்பிடி வெந்தயம் எடுத்துக்கொள்ளுங்கள். அதை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 5 நாள் ஊற வையுக்கள். பிறகு, அதை எடுத்து, அதிலிருந்து தண்ணீர் கொஞ்சம் வடிகட்டி எடுத்துக்கொள்ளூங்கள். பிறகு, அந்த வெந்தயத்தை மிக்சியில் போட்டு நன்றாக நைசாக அரைத்துக்கொள்ளுங்கள். பிறகு, அதை மீண்டும் ஒரு 5 நாள் ஊற வையுங்கள். வடிகட்டி எடுத்து வைத்த தண்ணீரை ஊற்றுங்கள். நன்றாகக் கலக்குங்கள். அதனுடன் நன்றாகப் புளித்த தயிர் 1 டம்ப்ளர் ஊற்றிக் கலக்குங்கள். இதனுடன், காபி தூள் அல்லது டீ தூள் 1 டீஸ்பூன் போட்டு கலக்குங்கள். அடுத்து, இதை மீண்டும் ஒரு 5 நாள் மூடி வைத்து விடுங்கள். 5 நாள் கழித்து திறந்து பார்த்தால், பூஞ்சை படர்ந்து இருக்கும்.
Advertisment
Advertisements
இதை 5 மில்லி அளவு எடுத்து அதனுடன் 1 லிட்டர் அளவு தண்ணீர் கலந்து கரைசலாக எடுத்துக்கொள்ளுங்கள். ரோஜா செடியின் அடிப்பகுதியை நன்றாகக் கிளறிவிட்டு பிறகு இந்த கரைசலை ஊற்றுங்கள். ரோஜா செடி 1 மாதத்தில் தாறுமாறாக பூ பூக்கும். செடியும் வளமாக செழிப்பாக இருக்கும். இந்த வெந்தயம் உரத்தை செய்வதற்கு நாள் ஆகும் என்றாலும் உறுதியாக பலன் இருக்கும். இந்த உரத்தை ரோஜா செடிகளுக்கு மட்டுமல்லாமல் எல்லா செடிகளுக்கும் பயன்படுத்தலாம்.