New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/11/sabarimalatemple-7591.jpg)
Sabarimala Ayyappan temple
Kerala: Sabarimala Ayyappan temple Darshan | கேரளா: சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Sabarimala Ayyappan temple
Sabarimala Ayyappan temple | சபரிமலை நடை திறப்பு | சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசன நேரம் நீடிக்கப்பட்டுள்ளது. இனி 3 மணிக்கே திறக்கப்படும் என சபரிமலை ஐயப்பன் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் தொடங்கியதும், ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து ஐயப்பனை தரிசிக்க சபரிமலை செல்வது வழக்கம். தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகம் உட்பட இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாட்டிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர்.
அந்தவகையில், மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 16 ஆம் தேதி திறக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் சாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில் பக்தர்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் சபரிமலை சன்னிதான நடையானது, இனி 3 மணிக்கே திறக்கப்படும் என சபரிமலை ஐயப்பன் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி காலை பூஜைகளுக்கு பிறகு மூடப்படும் நடை, மீண்டும் மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் 3 மணிக்கே திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இனி சபரிமலையில் காலை 4 முதல் பகல் 1 மணி வரையும், மாலை 3 முதல் இரவு 11 மணி வரையும் தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசிக்க வருவோர் இணைய வழியில் முன்பதிவு செய்வதையும் இம்முறை கட்டாயம் ஆக்கியுள்ளனர். மேலும் பக்தர்கள், முன்பதிவு செய்ய வசதியாக நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் தேவசம்போர்டு சார்பில் இலவசமாக முன்பதிவு செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.