Advertisment

இனி விமானத்தில் இருமுடி கொண்டு செல்லலாம்: சபரிமலை பக்தர்களுக்கு சிறப்பு அனுமதி

சபரிமலைக்கு விமானம் மூலம் செல்லும் பக்தர்கள் இனி இருமுடி பைகளை தங்களுடன் எடுத்துச் செல்லலாம் என விமானப் போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Parandur Airport

கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. இது உலகப் புகழ்பெற்ற கோயிலாகும். இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக விஷேச நாட்களில் அதிக மக்கள் வருவர். 

Advertisment

அதே போல் சபரிமலைக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி கோயில் சென்று வழிபடுவர். அப்படி செல்லும் மக்கள் ரயில், பேருந்துகள், கார்கள், சிலர் விமானங்களில் செல்வர்.

அப்படி விமானங்களில் செல்லும் போது தேங்காய், நெய் கொண்ட இருமுடி பைகளை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. விமானத்தில் செல்பவர்கள் அங்கு இருக்கும் குருசாமிகளிடம் இருமுடி கட்டிக் கொள்கிறார்கள். 

இந்த நிலையில் இந்த முறை சபரிமலை பக்தர்கள் விமானத்தில் நெய், தேங்காய் கொண்ட இருமுடி பைகளை கொண்டு செல்ல சிறப்பு அனுமதி அளிக்கப்படுகிறது. 

Advertisment
Advertisement

இதற்காக பாதுகாப்பு விதிமுறைகளில் குறுகிய காலத்திற்கு தளர்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு அனுமதிக்கும் போது எக்ஸ்ரே, இடிடி (அதாவது வெடிபொருட்களை அடையாளம் காணும் கருவி) ஆகியவற்றின் மூலம் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பிறகே பக்தர்கள் இருமுடியை விமானத்தில் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவர்.

114615333

அடுத்த ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி வரை மகரஜோதி தரிசனம் முடிவும் வரை இந்த சிறப்பு அனுமதி நடைமுறையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment