கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் மகள் சாரா கடந்த சில தினங்களாக சமூகவலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் நபராக மாறியுள்ளார்.
மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் - அஞ்சலி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். மூத்தவர் சாரா அடுத்து மகன் அர்ஜூன். இவர்களில் அர்ஜூன் தனது தந்தை வழியில் கிரிக்கெட் வீரராக வளர்ந்து வருகிறார். இன்னும் அவர் லைம்லைட்டுக்கு வரவில்லை. மூத்த பெண்ணான சாரா குறித்துத்தான் இப்போது செய்திகள் வேகம் பிடித்துள்ளன. ஏற்கனவே சாரா மீது பாலிவுட் கண்கள் பாய்ந்தபடியே இருந்தன. மிகவும் அழகாக மட்டுமல்ல, புத்திசாலியாகவும் இருப்பவர் சாரா என்று புகழ் வட்டத்தில் இருந்து வந்தார். தற்போது அவரை நடிகையாக்க முயற்சிகள் நடந்து வருகின்றனவாம்.
இந்த தகவலில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் கடந்த சில நாட்களாக சாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித விதமான் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார். இவரை இன்ஸ்டாகிராம் பின் தொடர்வோரின் எண்ணிகையும் கடந்த 1 வாரத்தில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
விளையாட்டு உலகிலிருந்து திரையுலகுக்கு வாரிசுகள் வருவது புதிதல்ல. ஏற்கனவே பேட்மிண்டன் ஜாம்பவான் பிரகாஷ் படுகோனேவின் மகள் தீபிகா படுகோனே இந்தித் திரையுலகில் ராணியாக திகழ்ந்து வருவது நினைவிருக்கலாம்.