சாரா மற்றும் நரேன் யூடியூப் சேனல் நடத்தும் தம்பதிகள். தாங்கள் எப்படி டிரெண்டிங் யூடியூப் தம்பதிகளாக இருக்கிறோம் என்பது தொடர்பாக பேசி உள்ளனர்.
இருவரும் கொரோனா காலத்தின்போதுதான், யூடியூப் சேனலை தொடங்கி உள்ளனர். முதலில் சமையல் செய்யும் வீடியோக்களை சரன் மற்றும் நரேன் செய்துள்ளனர். இதைதொடர்ந்து சமையல் வீடியோ செய்தால், எப்படி அதிக பார்வையாளர்களை பெற முடியும். ஏற்கனவே அதிகமானோர் அதைதான் செய்கிறார்கள், என்பதால், பயணம் செய்து வீடியோக்களை எடுக்கலாம், டிராவல் செய்வதை நாம் முக்கிய பணியாக செய்யலாம் என்பதை முடிவு செய்து, அப்போது ஆப்பரில் அந்தமான் செல்லும் டிக்கெட் கிடைத்தால், அந்தமான் சென்று வீடியோ பதிவு செய்தோம், அது நல்ல வரவேற்பை தந்தது.
குழந்தையை எடுத்துகொண்டு, தேவையான பொருட்களை காரில் எடுத்துகொண்டு அருகில் இருக்கும் இடங்களுக்கு சென்றுவிடுவோம், அங்கே வீடு பார்த்து தங்குவோம். அங்கிருக்கும் இடங்களை வீடியோ பதிவு செய்வோம். இப்படிதான் செய்துவந்தோம். கோவிட் முடிந்ததும், குழந்தை வளர்ந்துவிட்டார், குழந்தையை பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டும் என்பதாலும், அனைவரையும் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று சொன்னதாலும், இன்ஸ்டாவில் அதிக கவனம் செலுத்தினோம். கிடைக்கும் நேரத்தில் டிராவல் போவோம். அதை வீடியோ செய்வோம்.
இன்ஸ்டாவில் 50 வீட்டியோ பதிவிட்ட பிறகு அதிகம் பேருக்கு தெரியத் தொடங்கினோம். செராக்ஸ் எடுக்க 10 ரூபாய் கொடு, என்ற வீடியோ மூலம்தான் அதிக நபர்களுக்கு தெரியத் தொடங்கினோம். அதை விளையாட்டாகத்தான் எடுத்தோம், ஆனால் அது அதிகமாக டிரெண்டானது. முதலில் யாரும் வீடியோ செய்ய வேண்டாம், அதுதான் வருமானம் வருகிறதே அதை வைத்து வாழுங்கள், என்றுதான் வீட்டில் இருப்பவர்களும், வெளியிலும் சொன்னார்கள்.
எங்கள் இருவருக்கும் அதிகம் பேருக்கு சென்றடைய வேண்டும் என்று ஆசை இருந்தது. இன்ஸ்டாவில் தினமும் வீடியோ போடவில்லை என்றால் நம்மை மறந்துவிடுவார்கள். எனது கணவர்தான் அதிகம் வீடியோ எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுவார். வீடியோவை எடிட் செய்வது, அதற்கான மியூசிக் போடுவது என்று எல்லாம் அவர்தான் செய்வார். நாங்கள் இருவரும் எச்.ஆர் வேலைதான் செய்கிறோம். வீட்டில் ஆபிஸ் வேலை செய்யும்போது, காய்கறிகளை நறுக்கும் வீடியோ நல்ல பார்வையாளர்களை பெற்றது.
2014ம் ஆண்டு நாங்கள் இருவரும் ஒரே அலுவலகத்தில்தான் வேலை பார்த்ததாக அவரது கணவர் சொல்கிறார். ஒரே குழுவில்தான் இருவரும் பணிபுரிந்தோம். நான் முதலில் வாங்கிய ஐ-போனில் இவர் செல்பி எடுத்துக்கொண்டார். அந்த போட்டோவை நான் டெலிட் செய்யவில்லை. அதை 10 நாட்களுக்கு பின்பு மனைவிக்கு அனுப்பினேன். மேலும் அவரது மனைவி கூறுகையில் ஆரம்ப காலத்தில் எனது சாப்பாட்டை வாங்கிக்கொண்டு, சூடான சாப்பாட்டை எனக்கு கொடுப்பார். அதனால்தான் அவர் மீது காதல் வந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“