கார்கில் மற்றும் கன்னியாகுமாரியில் பின் தங்கிய குழந்தைகளுக்காக வகுப்பறை கட்டுவதற்க்கு நிதி திரட்டும் வகையில் கோவை கொடிசியா வளாகத்தில் கல்வி மூலம் சுதந்திரம் எனும் தலைப்பில் குட்டி ரோடீஸ் என்ற குழந்தைகளுக்கான சைக்கிளிங் போட்டி நடைபெற்றது.
ரவுண்ட் டேபிள் ஆப் இந்தியா சார்பில் நடைபெற்ற இந்த சைக்கிளிங் நிகழ்ச்சியை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
500 மீட்டர், 1 கிலோ மீட்டர் பிரிவில் நடைபெற்ற இதில் 5 வயது முதல் 15 வரையிலான குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
/indian-express-tamil/media/media_files/2024/12/01/vAiQWQTvjcUKJkPwW5UM.jpeg)
இதில் குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த போட்டியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“