/tamil-ie/media/media_files/uploads/2018/03/a573.jpg)
உயிரிழப்பை ஏற்படுத்தும் புதிய நோய் விரைவில் பரவ உள்ளதாக WHO எச்சரிக்கை விடுத்துள்ளது.
வரலாற்றில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய நோய் ஒன்று பரவ உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெனிவாவை தலைமை இடமாக கொண்டு இயங்கும் உலக சுகாதார நிறுவனமானது மூத்த ஆராய்ச்சியாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தியது.
அதில், ஒட்டுமொத்த உலக மக்களின் சுகாதாரத்துக்கு அவசர நிலை ஏற்படுமளவு புதிய நோய் பரவ இருப்பதாகவும், இதுவரை கண்டிராத அளவுக்கு உயிர் சேதங்களை அந்த நோய் ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடுமாறு ஆராய்ச்சியாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டது. இந்த நோய்க்கு "Disease X" என்று பெயரிடப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.