பருக்கள் போய்விடும் ஆனால் சருமம் சேதமாகும் - ஜனனி அசோக் பியூட்டி ஹாக்ஸ்
Serial Actress Janani Ashok Beauty Hacks Tamil News பருக்கள் போய் வேறு ஏதாவது பிரச்சனை ஏற்படும். அதனால் வீட்டில் இருக்கும் பொருள்களை அதிகம் பயன்படுத்த மாட்டேன்.
Serial Actress Janani Ashok Beauty Hacks Tamil News
Serial Actress Janani Ashok Beauty Hacks Tamil News : விஜய் டிவியின் மாப்பிள்ளை தொடர் மூலம் அறிமுகமாகி, மௌன ராகம், செம்பருத்தி என பல தொடர்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தைச் சேர்த்திருப்பவர் ஜனனி அசோக். பெரும்பாலானவர்கள் ஹோம் ரெமடிகளை பின்பற்றி வரும் நிலையில், இவர் அவற்றைத் தவிர்த்து வருகிறார். அதற்கான காரம் மற்றும் மேலும் சில எளிய சரும பராமரிப்பு முறைகளை சமீபத்தில் பகிர்ந்துகொண்டார்.
Advertisment
"சருமம் சம்பந்தமான பிரச்சினையைப் பொறுத்த வரைக்கும், மருத்துவரிடம் சென்றாலோ அல்லது பிறர் கூறும் ரெமடிகளை முயற்சி செய்தாலோ, அவை நூறு சதவிகிதம் உங்களுக்கும் ஒர்க் அவுட் ஆகும் என்று சொல்லிவிடமுடியாது. உங்கள் சருமம் பற்றி உங்களுக்குத்தான் தெரியும். எது உங்கள் சருமத்திற்குப் பொருந்தும் பொருந்தாது என்பதை உங்களைவிட யாராலும் சொல்லிவிட முடியாது. எந்த ஒரு பொருளையும் உபயோகிப்பதற்கு முன்பு இதனை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
நான் எப்போதுமே ஷூட்டிங் போகும்போது, நிச்சயம் மாய்ஸ்ச்சரைசர் மற்றும் சன்ஸ்க்ரீன் லோஷன் பயன்படுத்துவேன். அதேபோல ஷீட் மாஸ்க் பயன்படுத்துவேன். அதேபோல இரவு நேரங்களில் எவ்வளவு வேலை இருந்தாலும் மேக்-அப் அகற்றுவது முக்கியம். அதனை நான் மிகவும் சந்தோஷமாக செய்வேன். நைட் க்ரீம் மற்றும் ட்ரீட்மெண்ட் பொருள்கள்தான் இரவில் பயன்படுத்துவேன்.
மேலும், தலைமுடிக்கு ஹீட்டர் பயன்படுத்தவே மாட்டேன். எக்ஸ்டென்ஷன் வைப்பதற்கு ஏதுவாக இருக்கும் அளவிற்குத் தலைமுடியைப் பராமரிப்பேன். ஷூட் இருக்கும் நாள்களில் வாரத்திற்கு ஒருமுறையும் இல்லையென்றால் இரண்டு முறையாவது எண்ணெய் தேய்த்து நன்கு மசாஜ் செய்து குளிப்பேன்.
பெரும்பாலும் நான் ஹோம் ரெமடிகளை முயற்சி செய்ய மாட்டேன். உதாரணத்திற்குப் பருக்கள் வந்தால் மஞ்சள் போடச்சொல்லுவார்கள். ஆனால், என்னைப்போன்ற சென்சிடிவ் ஸ்கின் உடையவர்களுக்கு மஞ்சள் செட் ஆகாது. சருமத்தை டேமேஜ் செய்துவிடும். பருக்கள் போய் வேறு ஏதாவது பிரச்சனை ஏற்படும். அதனால் வீட்டில் இருக்கும் பொருள்களை அதிகம் பயன்படுத்த மாட்டேன்.
எனக்குத் தெரிந்து சருமத்தை ஸ்பாயில் செய்யாத ஒரேயொரு பொருள் என்றால் அது கற்றாழை மட்டும்தான். அதிலும், வீட்டில் வளர்த்து அந்த ஒரிஜினல் கற்றாழையைத்தான் பயன்படுத்துவேன். சருமம் மற்றும் தலைமுடி இரண்டிற்கும் அது மட்டுமே சிறந்த பராமரிப்பு பொருள். மேலும், நிறையத் தண்ணீர் குடிப்பது, பழங்கள் சாப்பிடுவது போன்றவை சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil