நாம் இட்லி பொடி, அல்லது குழம்பில் சேர்த்து நாம் எள்ளை சாப்பிடுவோம். இந்நிலையில் எள்ளில் நமக்கு தெரியாத அதிக பயன்கள் இருக்கிறது. இதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
இதில் லிக்நன்ஸ் என்பது உள்ளது. இந்த ஆண்டி ஆக்ஸிடண்ட் தன்மை தீவிர நோய்கள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது. குறிப்பாக இதய நோய், புற்று நோய், சுகர் நோய் ஏற்படாமல் தடுக்கும். இந்த சத்து, ஹார்மோன்கள் சீராக இருக்க உதவுகிறது. மேலும் மாதவிடாய் நின்ற பெண்கள் இதை எடுத்துகொள்வது சிறந்ததாக இருக்கும்.
இதில் கால்சியம், மெக்னீஷியம், பாஸ்பரஸ் உள்ளதால், எலும்புகளை வலுவாக்குகிறது. நாம் தொடர்ந்து எள்ளை சாப்பிட்டு வந்தால், எலும்பின் அடர்த்தி அதிகரிக்கிறது. இதனால் ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படாது.
இதில் ஜிங்க், வைட்டமின் இ இருப்பதால், இது ஆரோக்கியமான சருமம், கூந்தல் ஆரோக்கியத்திற்கு உதவும். ஜிங்க் சத்து கொலஜன் உற்பத்தி செய்ய உதவுகிறது. இதனால் சரும் சுருங்கி விரியும் தன்மை அதிகரிக்கும். வைட்டமின் இ சத்து சருமத்தை சேதத்திலிருந்து காப்பாற்றுகிறது.
இதில் நார்சத்து உள்ளது. இது ஜீரண ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. வயிற்றின் செயல்பாடுகளை சீர்படுத்தி, மலச்சிக்கலை குறைக்கும். குடலில் உள்ள நுண்ணுயிர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
தொடர்ந்து நாம் எள்ளை சாப்பிட்டல், நமது பற்கள் சுத்தமாகும். பற்களில் மஞ்சள் போன்ற படலம் படியாது. நமது பற்களின் ஈறுகளுக்கு நல்லது. இதில் இருக்கும் கால்சியம் பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். இதில் உள்ள அதிக கால்சியம் சத்து பற்களுக்கு உதவியாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“