ஒரு முறை செட் தோசை இப்படி செய்யுங்க செம்ம சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1 கப்
புழுங்கலரிசி – 1 கப்
உளுந்தும் பருப்பு – அரை கப்
பச்சரி சாதம் – 1 கைப்பிடி
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள்- 1 சிட்டிகை
எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை: அரிசி, பருப்பை கழுவி ஒன்றாக ஊற வைத்து ( 3 மணி நேரம் ) , சாதத்துடன் சேர்த்து மைய ஆட்டவும். பின் உப்பு கலந்துவைத்து, 10 மணி நேரம் கழித்து மறுநாள் காலையில் அத்துடன் மஞ்சள்தூள் அல்லது சேகரி பவுடர் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கலில் ஊத்தப்பமாக ஊற்றி இருபுறமும் எண்ணெய் ஊற்றி வேகவிட்டு எடுக்கவும்.