அமைதி எவருக்குத் தேவைப்படுகின்றதோ, அவர்கள் சேவாகிராம் செல்வதுதான் நல்லது.
மகாராஷ்டிராவின் வர்தா மாவட்டத்தில் அமைந்துள்ளது சேவாகிராம் என்ற சிரிய நகரம். 1940-க்கு முன்பு ஷெயகாவ்ன் என்று அழைக்கப்பட்ட இந்த நகரம், காந்தியடிகள் இங்கு ஆஸ்ரமம் தொடங்கியபிறகு சேவாகிராம் என பெயர் மாற்றம் பெற்றது.
இந்த சேவாகிராம் நகரம், இந்தியாவின் உயரிய கலாசார நினைவுச் சின்னமாக விளங்கி வருகிறது.
சேவாகிராம் ஆஸ்ரமம் காந்தி அடிகள் பின்பற்றிய வாழ்கை முறையை பிரதிபலிப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்த நகரின் சிறப்பம்சமாக காந்தியடிகளும், அவர் மனைவி கஸ்தூரிபாயும் ஒன்றாக வாழ்ந்த குடிசைகள் இன்றும் உறுதியாக உள்ளது.
இந்த குடிசைகள் ஈரமண் ஓடு, பாய்கள் மற்றும் மூங்கில்களை கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் எந்த வித அலங்காரங்களும் இன்றி இந்த குடிசைகள் இப்போதும் இருப்பது காண்போரை மகிழ்ச்சியின் உச்சிக்கே கொண்டு செல்கின்றது.
இந்தியாவின் தந்தை காந்தியடிகள் எவ்வளவு எளிமையான வாழ்கையை வாழ்ந்தார் என்பது எல்லோருக்கும் புரிந்து விடும்.
மேலும் இங்கு மகாதேவ் குடில், கிஷோர் மற்றும் பர்ச்சுரே குடில்கள் போன்றவையும் காணப்படுகின்றது. எப்போது சேவாகிராமில் காந்தியடிகள் ஆஸ்ரமம் அமைத்தாரோ அதன் பிறகு பெருமளவிலான மக்கள் குடியேறியுள்ளனர்.
இந்தியாவின் தந்தை காந்தியின் வாழ்வு முறையை அறிந்து கொள்ளும் பேரார்வத்தோடு ஆண்டுதோறும் இந்த நகரத்துக்கு உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள், வந்து செல்கின்றனர்.
சேவாகிராம் நகரத்தின் புகழே இந்த ஆஸ்ரமம் தான் என்று கூறலாம். இந்த சிறிய நகரத்துக்கு 1936-ஆம் ஆண்டு வந்த காந்தியடிகள் 1948 வரை மொத்தம் 13 ஆண்டுகள், தன் வாழ்நாள் முழுமையும் இங்குதான் வாழ்ந்தார் என்கிறது குறிப்புக்கள்.
சபர்மதி ஆஸ்ரமத்திலிருந்து, தண்டி வரை 1930-ஆம் ஆண்டு பாத யாத்திரையை தொடங்கிய காந்தியடிகள், இந்தியாவுக்கு விடுதலை கிடைக்கும் வரை சபர்மதியில் கால் வைப்பதில்லை என்று சபதம் செய்தார். பின்னர் இந்த யாத்திரையில் கைது செய்யப்பட்ட அவர், சேவாகிராம் வந்து ஆஸ்ரமம் தொடங்கியதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், சேவாகிராம் ஆஸ்ரமம் பகுதியில், ஆதி நிவாஸ், வழிபாட்டுத் திடல், பா குடில், பாபு குடில் மற்றும் அக்ரி நிவாஸ் போன்ற பகுதிகள் காந்தியடிகளாலும், கஸ்தூரிபாயினாலும் அதிகமாக பயன்படுத்தப் பட்ட இடங்களாக கூறப்படுகின்றது.
இந்த ஆசிரமத்தின் வேறு சில பகுதிகளாக, பாபுவின் சமையலறை, அத்ய ஆதி நிவாஸ், மகாதேவ் குடில், கிஷோர் நிவாஸ், பர்ச்சுரே குடில், ரஸ்த்தம் பவன் மற்றும் யாத்ரி நிவாஸ் ஆகியவை உள்ளன.
இங்குள்ள யாத்ரி நிவாஸ் மட்டும் 1982-ஆம் ஆண்டு இந்திய அரசால் கட்டப்பட்ட விருந்தினர் இல்லமாகும்