இன்றைய சூழலில் நிறைய பேருக்கு முடி உதிர்வு பிரச்சனை இருக்கிறது. குறிப்பாக, ஆண் மற்றும் பெண் என அனைத்து பாலினத்தவருக்கும் இந்த பாதிப்பு இருக்கிறது. இதற்காக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
Advertisment
வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை மாற்றம், தூக்கமின்மை போன்ற பல்வேறு காரணங்களால் பொடுகு தொல்லை ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனினும், முடி உதிர்வதற்கான பொதுவான காரணமாக பொடுகு பிரச்சனை இருக்கிறது.
பொடுகு தொல்லையை போக்க நிறைய ஷாம்பூக்கள், சீரம் போன்றவை கடைகளில் விற்பனை ஆகிறது. எனினும், இவற்றில் அதிக இரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருப்பதால், இதன் மூலம் ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.
அந்த வகையில், வீட்டிலேயே இயற்கையான முறையில் பொடுகு தொல்லைக்கு தீர்வு காணலாம் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். இதற்காக சின்ன வெங்காயத்தை மட்டும் கூட பயன்படுத்தலாம். அதன்படி, சின்ன வெங்காயத்தை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து, அதன் விழுதை மட்டும் தலையில் தேய்க்க வேண்டும்.
Advertisment
Advertisements
இதன் பின்னர், சுமார் 30 நிமிடங்கள் கழித்து குளித்து விடலாம். இவ்வாறு தொடர்ச்சியாக செய்தால் பொடுகு பிரச்சனை நீங்கும் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். ஏனெனில், சின்ன வெங்காயத்தில் இருக்கும் சல்ஃபர் பொடுகை நீக்கும் ஆற்றல் கொண்டது என்று அவர் கூறுகிறார்.
நன்றி - EthnicHealthCare Dr.B.YogaVidhya Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.