சரியான தூக்கம் வருவதற்கு நாம் பல விஷயங்கள் தொடர்ந்து செய்வோம். குறிப்பாக காப்பி, டீ குடிப்பதை தவிர்ப்பது, நடு இரவில் சாப்பிடுவது, செல்போனை பயன்படுத்துவது இப்படிய பல விஷயங்களை நாம் செய்யாமல் தவிர்த்திருப்போம்.
இந்நிலையில் தூங்குவதற்கு முன்பாக தண்ணீர் குடிக்கலாமா? என்ற கேள்வி எழுவது இயல்புதான். இதில் சாதாரண தண்ணீர் குடிக்க வேண்டுமா ? அல்லது சுடான தண்ணீர் குடிக்க வேண்டுமா என்ற கேள்வியும் எழும். இதற்கு மருத்துவர்கள் கூறும் விளக்கத்தை பார்க்கலாம்.
தூங்குவதற்கு முன்பாக தண்ணீர் குடித்தால் நமது உடலின் தட்ப வெப்ப நிலை சீராக இருக்கும். அதிகமாக குளிராகவோ அல்லது அதிக சுடாகவோ இருக்காது. இதனால் வரட்சி ஏற்படாமல் தவிர்க்கலாம். தண்ணீர் பற்றாக்குறை ஒட்டுமொத்த உறக்கத்தின் செயல்பாடையும் பாதிக்கும்.
இந்நிலையில் தூங்குவதற்கு சிறிது நேரம் முன்பாக அதிக தண்ணீர் குடிப்பதும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். தூங்குவதற்கு முன்பாக அதிகம் தண்ணீர் குடித்தால், உங்களுக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். ஆனால் தூக்கத்தில் இதை நீங்க செய்யாமல் தவிர்ப்பீர்கள். இதனால் அதிக நேரம் சிறுநீர் கழிக்காமல் இருப்பீர்கள்.
இந்நிலையில் தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக தண்ணீர் குடிப்பது நல்லது, மேலும் சூடான தண்ணீர் குடிப்பதுதான் சிறந்தது. அது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். மேலும் வியர்க்கவைக்கும் என்பதால், நமது சருமத்தில் உள்ள நஞ்சுகள் வெளியேறும். இதனால் பொலிவு கிடைக்கும்.
மேலும் சிறுநீரக கோளாறு, இதய கோளாறு உள்ளவர்கள், மருத்துவர்களை அணுகிய பிறகு தண்ணீர் குடிக்கும் அளவை தேர்வு செய்துகொள்ளுங்கள்.