Tamil Serial News: சீரியலில் அமைதியாக நடிப்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதில் நடிகை ஸ்ரீ துர்கா குறிப்பிடத் தகுந்தவர். சீரியலில் அமைதியான கதாபாத்திரங்களிலும், அழுகை கதாபாத்திரங்களிலும் தான் ஸ்ரீதுர்கா அதிகமாக நடித்துள்ளார். சிறுவயதிலிருந்தே சினிமா, சீரியலில் நடித்து வரும் இவரை தமிழ் ரசிகர்கள் நன்றாக அறிவர். கிட்டத் தட்ட 18 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் இருக்கிறார் துர்கா.
கணவர் மற்றும் குடும்பத்தினருடன்...
சன் டிவியில் ஒளிபரப்பான உறவுகள், தியாகம், முந்தானை முடிச்சு போன்ற தொடர்களில் நடித்திருந்தார். அதோடு கேப்டன் டிவி-யில் நிகழ்ச்சி ஒன்றையும் இவரே தயாரித்து வழங்கினார். துர்கா இதுவரை நடித்த சீரியலில் எல்லா கேரக்டர்களுமே, அமைதியான, பொறுமையான கதாபாத்திரங்கள் தான். ஊஞ்சல், அலைகள், சிகரம் ஆகிய சீரியல்களிலும் இவரது பங்கு அதிகம். அதிலும் குறிப்பாக இவர் ஊஞ்சல் சீரியலை பற்றி அடிக்கடி பேசுவார். ஏனென்றால் ஊஞ்சல் சீரியலில் தான் முதன் முதலாக நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் துர்கா. அந்த சீரியலில் முதல் பாதியில் நெகடிவ் கேரக்டரும், இரண்டாம் பாதியில் தவறை உணர்ந்து திருந்தி வாழும் பாசிட்டிவான கேரக்டரிலும் நடித்து, ரசிகர்களின் மனதை கவர்ந்தார். சமீபத்தில் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே சீரியலில், துரை சிங்கத்தின் தங்கையாக நடித்து வந்தவர், பின்னர் திடீரென அதிலிருந்து விலகினார்.
ஸ்ரீதுர்காவின் கேண்டிட் படம்
இது குறித்து நேர்க்காணல் ஒன்றில் பேசிய ஸ்ரீதுர்கா, “இதுவரை நடித்த எல்லா கேரக்டருமே பிடிக்கும். "ஊஞ்சல்', "அலைகள்', "சிகரம்' என எல்லாமே. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் "ஊஞ்சல்' தொடரில் நடித்த வேடம். அதில் முதல் பாதியில் நெகடீவ் கேரக்டர் செய்திருந்தேன். இரண்டாம் பாதியில் செய்த தவறை உணர்ந்து திருந்தி வாழும் பாஸிடீவான கேரக்டர். அது ரொம்ப பிடித்திருந்தது.
ஹாயாக ஊர் சுற்றிய போது...
ஜாலியாக மற்றவர்களை சிரிக்க வைத்து பார்க்கும் நகைச்சுவை கேரக்டர்கள் ரொம்ப பிடிக்கும். அந்த மாதிரி கேரக்டர்கள் நிறைய கிடைக்கவில்லையே என்று வருந்தியது உண்டு. ஜெயா டிவியில் "பொய் சொல்ல போறோம்' என்ற தொடரில் ஒரு டிராக் மட்டும் காமெடி செய்திருப்பேன். அதில் ரொம்பவே விரும்பி நடித்தேன்.
ஹோம்லி லுக்கில் ரசிகர்களைக் கவர்ந்தவர்.
ஒரு சில படங்கள் நடித்திருக்கிறேன். எனக்கு முக்கியத்துவம் இருப்பது போன்ற நல்ல வாய்ப்புகள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். எனக்கு நடிப்பு தவிர பாடுவதும், ஆடுவதும் ரொம்ப பிடிக்கும். என் குடும்பமே ஒரு சங்கீத குடும்பம். நானும் முறைப்படி சங்கீதம் பயின்றிருக்கிறேன். அதனால் அந்தத் துறையில் வர வேண்டும் நினைப்பேன். அதுதவிர சின்ன வயதிலிருந்தே போட்டோகிராபி மேல் ஆசை உண்டு. அதனால் சினிமாடோகிராபராக வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. வருங்காலத்தில் இசைப்பள்ளி நடத்த வேண்டும் என்று ஆசை உண்டு” என்றார்.
கடந்த 2015-ம் ஆண்டு கெளதம் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார் ஸ்ரீதுர்கா. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”