/indian-express-tamil/media/media_files/2025/05/17/KAfeQlS73WZBkD7he2Te.jpg)
Silk saree dry cleaning at home
உங்கள் அழகிய பட்டுப் புடவைகளை டிரை வாஷ் செய்ய ஆயிரக்கணக்கில் செலவழிக்க மனம் இல்லையா? கவலையை விடுங்கள்! இனி உங்கள் பட்டுப் புடவைகளை வீட்டிலேயே, ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் பளபளவென புதியது போல மாற்ற ஒரு அற்புதமான ரகசிய முறையை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
எளிமையான மூன்று படிகளில் உங்கள் பட்டுப் புடவைகளை வீட்டிலேயே எவ்வாறு பராமரிப்பது என்பதை இங்கே காணலாம்.
தேவையான பொருட்கள்:
ஒரு பக்கெட் தண்ணீர்
2 ஸ்பூன் சர்ப் பவுடர் அல்லது லிக்விட்
ஷாம்பு (கிளினிக் பிளஸ் போன்ற 1 ரூபாய் பாக்கெட் ஷாம்பு போதுமானது)
சாதாரண தண்ணீர்
டிரை வாஷ் செய்முறை:
முதல் படி - சர்ப் தண்ணீரில் அலசுதல்:
ஒரு பக்கெட்டில் போதுமான அளவு தண்ணீர் எடுத்து, அதில் 2 ஸ்பூன் சர்ப் பவுடரைச் சேர்த்து நன்றாக கலக்கவும். பவுடர் முழுமையாக கரைய வேண்டும், இல்லையெனில் புடவையில் ஒட்டிக்கொள்ளும்.
புடவையின் நிறங்கள் கலக்காமல் இருக்க, புடவையின் பார்டரை ஒரு கைக்குள் வருமாறு மடித்துக்கொள்ளவும். புடவையை சர்ப் கலந்த தண்ணீரில் மெதுவாக அலசவும். துவைக்கக் கூடாது, அலச மட்டுமே வேண்டும். குறைந்தது 20 முறையாவது நன்றாக அலச வேண்டும். அலசுவதுதான் அழுக்கு வெளியேற முக்கியம்.
அழுக்கு கரைந்து வந்திருப்பதை தண்ணீர் நிறம் மாறியிருப்பதன் மூலம் அறியலாம்.
இரண்டாம் படி - ஷாம்பு தண்ணீரில் அலசுதல்:
சர்ப் தண்ணீரில் அலசிய புடவையை அப்படியே எடுத்துக்கொள்ளவும். நார்மல் தண்ணீரில் அலசக்கூடாது.
மற்றொரு பக்கெட்டில் தண்ணீர் எடுத்து, அதில் ஷாம்பு கலந்து நுரை வரும்வரை கலக்கவும்.
புடவையை ஷாம்பு தண்ணீரில் முதல் படி போலவே நன்றாக அலசவும். இது எண்ணெய் பிசுக்கு போன்ற அழுக்குகளை நீக்கும். நன்றாக அழுத்தம் கொடுத்து அலச வேண்டும். இது புடவையை சேதப்படுத்தாமல், நிறம் மங்காமல் அழுக்கை மட்டுமே நீக்கும். புடவையை அடிக்கவோ, கசக்கவோ கூடாது.
மூன்றாம் படி - சாதாரண தண்ணீரில் அலசுதல்:
ஒரு பக்கெட்டில் சாதாரண தண்ணீர் எடுத்துக்கொள்ளவும்.
ஷாம்பு தண்ணீரில் அலசிய புடவையை விரித்து, சாதாரண தண்ணீரில் நன்றாக அலசவும். சோப்பு மற்றும் ஷாம்பு கலவை புடவையிலிருந்து முழுமையாக நீங்கும் வரை அலச வேண்டும். தேவைப்பட்டால், மற்றொரு முறை சாதாரண தண்ணீரில் அலசலாம்.
காயவைக்கும் முறை:
அலசிய பின் புடவையை பிழியக்கூடாது. அது புடவையை சேதப்படுத்தும்.
புடவையை நன்றாக உதறி, மடித்து நிழலில் காயப்போடவும். வெயிலில் காயப்போடக் கூடாது.
புடவை காய்ந்ததும், அயர்ன் செய்து பயன்படுத்தலாம்.
இந்த முறை பட்டுப் புடவையின் நிறத்தை மங்க விடாமல், புடவையை புதுசு போல் பளபளப்பாக வைத்திருக்க உதவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.