உங்க வீட்டுக்கு நத்தைகள் படையெடுக்குதா? அப்படியே 'யு டர்ன்' போட வைக்க ஈஸி டிரிக்ஸ்!

தரை நத்தைகள் மழைக்காலத்தில் அதிகம் காணப்படுகின்றன. மழைநீர் உப்பு கலந்ததாக இருப்பதால், அவை தன்னம்பிக்கையுடன் தோட்டங்களை, வீடுகளை ஆக்கிரமிக்கின்றன.

தரை நத்தைகள் மழைக்காலத்தில் அதிகம் காணப்படுகின்றன. மழைநீர் உப்பு கலந்ததாக இருப்பதால், அவை தன்னம்பிக்கையுடன் தோட்டங்களை, வீடுகளை ஆக்கிரமிக்கின்றன.

author-image
Mona Pachake
New Update
snail

மழைக்காலம் தொடங்கியதும், நம் சுற்றுப்புறங்களில் இயற்கை உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது வழமையானதுதான். ஆனால், சில உயிரினங்கள் மனித வாழ்விடத்திற்கே நேரடியாக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதில் முக்கியமானதொரு தொந்தரவு ஏற்படுத்தும் உயிரினம் நத்தைகள் ஆகும். வீடுகளில், தோட்டங்களில், சுவர்களிலும் கூட கூட்டு கூட்டாக ஊர்ந்து வரும் இந்த நத்தைகள், பொதுமக்களுக்கு பயத்தை ஏற்படுத்தும் அளவிற்கு பரவலாகக் காணப்படுகின்றன.

Advertisment

நத்தைகளின் வகைகள்

நத்தைகள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன:

  • கடல் நத்தைகள் 
  • நன்னீர் நத்தைகள்
  • தரை நத்தைகள்

இதில், தரை நத்தைகள் மழைக்காலத்தில் அதிகம் காணப்படுகின்றன. மழைநீர் உப்பு கலந்ததாக இருப்பதால், அவை தன்னம்பிக்கையுடன் தோட்டங்களை, வீடுகளை ஆக்கிரமிக்கின்றன. மக்கள் வாசிக்கும் இடங்களின் சுவர்களிலும், பூச்செடிகளிலும், கூடையிலுள்ள காய்கறி தாவரங்களிலும் இவை பெருகுகின்றன.

'பல்மோனேட்டா' வகை நத்தைகள் நுரையீரல் மூலமாகவும், 'பப்பாபில்லி' வகை நத்தைகள் செவுள்கள் மூலம் சுவாசிக்கின்றன.

istockphoto-1276547719-612x612

பயிர்களுக்கு ஏற்படும் சேதம்

தோட்டங்களில் நத்தைகள் புகுந்துவிட்டால், அவை மிக வேகமாக பெருகி நூற்றுக்கணக்கான அளவுக்கு வளர்கின்றன. இவை உணவாக தாவரங்களை மட்டுமன்றி, சிறு விலங்குகளையும் உண்கின்றன.

Advertisment
Advertisements

நத்தைகள் சேதப்படுத்தும் பயிர்கள் மற்றும் தாவரங்கள்:

  • வாழை
  • முட்டைகோஸ்
  • பப்பாளி
  • கீரை வகைகள்
  • பயறு வகைகள்
  • நிலக்கடலை
  • வெண்டை
  • கத்தரி
  • வெள்ளரி
  • பூச்செடிகள்

இதற்குமட்டுமில்லாமல், நத்தைகள் பல்லி, எலி, பாம்பு, பறவைகள், மேலும் பூஞ்சை, புழு, மலம், சென்டிபீடு பூச்சிகள் என பலவற்றையும் உணவாகக் கொண்டு சுற்றுச்சூழல் சமநிலையை பாதிக்கும் அளவிற்கு செல்லுகின்றன. குறிப்பாக, ஆப்பிரிக்க பெரிய நத்தை இனங்கள் மிக பெரிய சேதத்தை ஏற்படுத்தும் ஆபத்தான உயிரினங்களாகும்.

snail

நத்தைகளை அழிக்கும் முறைகள்

1. உப்பு மற்றும் புகையிலை

  • நத்தைகளை கைகளால் பொறுக்கி அழிக்கலாம்
  • அழுகிய காய்கறி இலைகளை வைத்து நத்தைகளை கவர்ந்து கொள்க
  • உப்பு தூவி நத்தையின் இயக்கத்தை தடை செய்யலாம்
  • புகையிலை சாறு + சதமயில் துத்தம் கலவை தெளிக்கலாம்

2. சுண்ணாம்பு மற்றும் அரிசி தவிடு

  • மெட்டால்டிஹைடு 5% மருந்து + அரிசி தவிடு கலவை
  • சுண்ணாம்பு தூளை செடிகள் சுற்றி தூவலாம்
  • இறந்த நத்தைகளை சேகரித்து, உடனடியாக புதைத்துவிட வேண்டும்

3. சூழல் சுத்தம் மற்றும் ஒழுங்கமைப்பு

  • பண்ணை கழிவுகள் இருக்கும் இடங்களை சுத்தம் செய்யவேண்டும்
  • நீர் தேங்காத வகையில் வடிகால் வசதி அமைக்கப்பட வேண்டும்
  • பயிர் செடிகளுக்கு இடைவெளி விட்டு நட வேண்டும்
  • மறைவிடங்களில் உறங்கும் நத்தைகளை அழிக்க வேண்டும்

நத்தைகள் பெரும் வேகத்தில் பெருகக்கூடியவை. அதனால், சிறு அலட்சியம் கூட பயிர்களின் முழுமையான அழிவுக்குக் காரணமாகும். நத்தைகளை முறையாக ஒழித்து, தாவரங்களை பாதுகாத்தாலே, நம் வீட்டுத் தோட்டங்கள், விவசாய நிலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஒரு பாதுகாப்பான நிலையை அடையக்கூடும்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: