/indian-express-tamil/media/media_files/2025/10/04/download-2025-10-04t1303-2025-10-04-13-03-41.jpg)
கரப்பான் பூச்சிகள் நம்முடைய வீடுகளில் மிகவும் சாதாரணமாகக் காணப்படும், ஆனால் அதே சமயம் மிகுந்த தொந்தரவாக இருக்கின்றன. பெரும்பாலும் இரவு நேரங்களில் அதிகமாக சுறுசுறுப்பாக இயங்கும் இவை, சமையலறை, கழிப்பறை, குப்பை கிடங்குகள் போன்ற ஈரமிகுந்த மற்றும் சுகாதாரமற்ற இடங்களை விரும்புகின்றன.
கரப்பான் பூச்சிகள் ஏன் தோன்றுகின்றன?
வீட்டின் சுற்றுப்புறம் சுத்தமில்லாமல் இருந்தால், சமையலறையில் உணவுப் பொருட்கள் வெளியில் அல்லது தரையில் விழுந்திருந்தால், குப்பைகள் தினமும் அகற்றப்படாமல் சேர்த்துவைக்கப்பட்டால், கழிப்பறைகளில் மற்றும் கழிவு நீர் வெளியேறும் குழாய்களில் ஈரப்பதம் இருந்தால், இவை அனைத்தும் கரப்பான் பூச்சிகளுக்கு வாழும் சூழலை உருவாக்குகின்றன.
பாதிப்புகள்
கரப்பான் பூச்சிகள் அவ்வளவு பாதிப்பற்றவை அல்ல. அவை வெளியில் இருந்து தூசி, கழிவு நீர், பாக்டீரியா மற்றும் வைரஸ்களை உடலில் கொண்டு வர வாய்ப்பு உள்ளது. இதனால் உணவு மாசுபடுவது, புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய இரசாயனங்கள் வெளியிடப்படுவது, ஆஸ்துமா, அலர்ஜி, சுவாச பிரச்சனைகள் போன்ற நோய்கள் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உடலில் அதிகமாக காணப்படுவதற்கு காரணமாகும். சில சமயங்களில், உணவுக்கழிவுகள் மற்றும் மாசுபட்ட உணவுகள் மூலம் தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் உள்ளது.
கரப்பான் பூச்சிகளை தடுக்க வேண்டிய வழிகள்
தினசரி வீட்டு சுத்தம் மற்றும் பராமரிப்பு மூலம் கரப்பான் பூச்சி தொல்லையை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். சமையலறையை தினமும் சுத்தம் செய்ய வேண்டும், குப்பை தொட்டியை மூடியுடன் வைத்துக் காலியாக்க வேண்டும், உணவுப் பொருட்களை மூடியுள்ள தட்டில் பாதுகாக்க வேண்டும், கழிவுநீர் குழாய்களை உலர்த்தி வைத்திருப்பது நல்லது. மேலும், தண்ணீர் சிந்தாமல் இருக்க கவனம் கொடுக்க வேண்டும். வீட்டின் பின்புறம் மற்றும் சாக்கடை அருகே தேங்கி நிற்கும் நீரை உடனே அகற்ற வேண்டும். இரவு நேரங்களில் சமைத்த உணவுகளை மூடியுடன் அல்லது ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.
இந்த அனைத்து முறைகளையும் பின்பற்றினால் வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லையை அடியோடு கட்டுப்படுத்த முடியும். இதற்கு மேலாக, ஒரு எளிய மற்றும் பயனுள்ள டிபும் உள்ளது. வீட்டிலேயே எளிதில் தயாரிக்கக்கூடிய லிக்விட் ஒன்றை பயன்படுத்துவதால், பூச்சிகள் இருந்த இடமே தெரியாமல் ஓடிவிடும்.
செய்முறை:
ஒரு ஸ்பூன் சர்க்கரையை எடுத்து இடிக்கக் கூடிய கல்லில் நன்கு அரைத்து பிடித்துக்கொள்ள வேண்டும். அதனுடன் சிறிது கிராம்பு சேர்த்து மீண்டும் நன்கு இடித்து, பிறகு தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, கரப்பான் பூச்சிகள் அதிகமாக வரும் இடங்களில் தெளிக்க வேண்டும். இதனால் அந்த இடத்திலிருந்த பூச்சிகள் விரைந்து ஓடிவிடும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம் வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லையை இயற்கையாகவும், எளிய முறையிலும் கட்டுப்படுத்த முடியும் என பரிந்துரை செய்யப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.