பலர் வீடுகளில் கரப்பான் பூச்சி தொல்லை காணப்படும். எத்தனையோ ஸ்ப்ரே மற்றும் மருந்துகள் பயன்படுத்தியும் இதன் தொல்லை குறையவில்லை என்ற கவலை பலரிடத்திலும் இருக்கும். அந்த வகையில் இயற்கையான முறையில் கரப்பான் பூச்சி தொல்லைக்கு எப்படி தீர்வு காண்பது என தற்போது காணலாம்.
முதலில் ஒரு வெங்காயத்தை இரண்டு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், வெட்டிய வெங்காயத்தை சிறிய துண்டுகளாக துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் 2 ஸ்பூன் அளவு பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறை சேர்த்து கலக்க வேண்டும்.
இதை மற்றொரு பெரிய பாத்திரத்திற்கு மாற்றி, அத்துடன் 2 கிளாஸ் தண்ணீர் சேர்க்க வேண்டும். அதன் பின்னர், இந்த நீரை வடிகட்டி எடுக்க வேண்டும். இதையடுத்து, இந்த நீரை ஸ்ப்ரே பாட்டிலில் மாற்றி கரப்பான் பூச்சிகள் இருக்கும் இடங்களில் தெளிக்கலாம்.
இவ்வாறு செய்வதன் மூலம் கரப்பான் பூச்சிகள் தொல்லையை முற்றிலும் போக்க முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“