Advertisment

சூப்பர் சிங்கரில் சாதித்த செந்தில் கணேஷ்! சொந்த ஊரில் என்னம்மா புது வீடு கட்டி இருக்கார் பாருங்க

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
singer senthil ganesh rajalakshmi new house vijay tv super singer hot star - நாட்டுப்புறப்பாடல்களால் சாதித்த செந்தில் கணேஷ்! சொந்த ஊரில் புது மாடி வீடு - உருக்கமான பதிவு

singer senthil ganesh rajalakshmi new house vijay tv super singer hot star - நாட்டுப்புறப்பாடல்களால் சாதித்த செந்தில் கணேஷ்! சொந்த ஊரில் புது மாடி வீடு - உருக்கமான பதிவு

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி. நாட்டுப்புறப் பாடல்களை எழுதி, மேடையில் பாடுவது தான் இவர்களது சிறப்பு அம்சம். இரண்டு பேரும் வெவ்வேறு அணிகளில் பாடி தங்களது திறமையை நிரூபித்து வந்தனர்.

Advertisment

சூப்பர் சிங்கர் 6வது சீசனில் நாட்டுப்புறப் பின்னணியில் பாடல்களை பாடி மக்களைக் கவர்ந்தவர்கள் செந்தில் - ராஜலட்சுமி தம்பதி. இவர்களே பாடலை எழுதி, அதை பாடியும் வந்தனர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் அந்த சீசனை இவர்களுக்காவே நேயர்கள் அதிகம் பார்த்தனர்.

இறுதியில், சூப்பர் சிங்கர் டைட்டிலை செந்தில் கணேஷ் தட்டிச் செல்ல, சூட்டோடு சூடாக 'சார்லி சாப்ளின் 2' படத்தில் 'என்ன மச்சான்' பாடலை இத்தம்பதி பாடினர். பாடலும் ஹிட்டாக, அடுத்தடுத்த இவர்களுக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பு வந்துக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில், 'கரிமுகன்' எனும் படத்தில் ஹீரோவாகவும் செந்தில் கணேஷ் நடித்தார்.

இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இருவரும் சேர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிலையில் செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி தம்பதியினர் தங்களின் சொந்த ஊரான களபத்தில் மாடி வீடு கட்டியுள்ளனர். வீட்டின் கிரகப்பிரவேசத்தில் அவர்களது நெருங்கிய சொந்தம் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை செந்தில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், 'என் தாய், தந்தையின் கனவை நிறைவேற்றி விட்டேன்' என்று மிகவும் சந்தோஷமாகத் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் முதன் முறை மேடையேறிய போதே செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி தம்பதி அதிகபட்ச நம்பிக்கையோடு தங்கள் சவால்களை எதிர்கொள்ளத் தொடங்கினர். கிராமத்தில் இருந்து வந்ததாலோ என்னவோ, அந்த சீசனில் மற்ற போட்டியாளர்கள் எவ்வளவு அருமையாக பாட்டுப் பாடி சவால் கொடுத்தாலும், நாட்டுப்புறப்பாடல் என்ற கான்செப்ட்டை கையில் எடுத்துக் கொண்டு அசத்தினர்.

சிட்டியில் வாழும் மக்களுக்கு கிராமம் என்பது சொர்க்கம் தானே. குடிசை போன்று ஒரு ஹோட்டல் வைத்தால் கூட, தேடிக் கண்டுபிடித்து வந்து சாப்பிட்டு செல்கிறார்கள், கிராம லொகேஷன் என்றாலே சிட்டிவாசிகள் அவ்வளவு விரும்புகின்றனர்.

அப்படி இருக்கையில், நாட்டுப்புறப்பாடலை ஒரு பெரும் மேடையில் பாடுபவர்களை ஊக்குவிக்காமல் இருப்பார்களா என்ன... அதேசமயம், இவர்களது அட்டகாசமான குரலும் மக்களை வெகுவாகக் கவர்ந்தது என்பதை மறுக்க முடியாது.

அதிலும் செந்தில் கணேஷின் குரல் தான் டாப்பு!!

Star Vijay Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment