இயற்கையான கிளினீங் தானியங்கள் சிறிது தண்ணீரைச் சேர்ப்பதன் மூலம் உங்கள் முகத்தில் ஒரு இனிமையான விளைவை ஏற்படுத்தும். பல உயர்தர அழகு பிராண்டுகள் உங்கள் சருமத்தை மிருதுவாகவும், ஈரப்பதமாகவும் மாற்றுவதால், சுத்தப்படுத்தும் தானியங்கள் (cleaning grains) மீது சத்தியம் செய்கின்றன.
ஃபேஸ் வாஷ் பவுடர் வீட்டிலேயே செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
* 1/4 கப் ஓட்ஸ் பவுடர்
* 1/2 கப் கடலை மாவு
* 2 டீஸ்பூன் பாதாம் பவுடர்
* லாவெண்டர் எண்ணெய் 10 சொட்டுகள்
செய்முறை
ஒரு கிண்ணத்தில் லாவெண்டர் எண்ணெய் சேர்த்து, அத்துடன் மேலே கூறப்பட்டுள்ள அனைத்து பொடிகளையும் நன்கு கலக்கவும். இதை ஒரு கண்ணாடி ஜாடியில் சேமிக்கவும். ஒவ்வொரு முறை முகம் கழுவும் போது, ஒரு ஸ்பூன் ஃபேஸ் வாஷ் பவுடர் எடுத்து முகத்தில் மெதுவாக தேய்த்து பிறகு தண்ணீரில் கழுவவும்.
பலன்கள்
ஓட்ஸ், ஒரு சிறந்த இயற்கை ஸ்க்ரப்பர், இது சருமத்தை ஒரே நேரத்தில் சுத்தம் செய்து, மென்மையாக்கும் மற்றும் ஈரப்பதமாக்குகிறது.
பாதாம் பவுடரில் உள்ள எக்ஸ்ஃபோலியண்ட் பண்புகள் உங்கள் தோல் பராமரிப்பு தயாரிப்பில் சிறந்த ஏஜண்டாக அமைகிறது.
மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-செப்டிக் பண்புகள் உங்கள் சருமத்தை குணப்படுத்தி, இயற்கையான பளபளப்பைக் கொடுக்க உதவுகிறது.
கடலை மாவில் உள்ள துகள்கள், உங்கள் துளைகளிலிருந்து அதிகப்படியான எண்ணெயை வெளியேற்றி, அவற்றைத் திறந்து மேலும் சிறிது சுவாசிக்க உதவுகிறது.
லாவெண்டர் அனைத்து தோல் வகைகளுக்கும் பொருந்தும், எனவே இது பாதுகாப்பானது. இது முகப்பரு, வடுக்களை அகற்ற உதவுகிறது, அழற்சி மற்றும் எரிச்சலூட்டும் தோலை அமைதிப்படுத்துகிறது.
கண்டிப்பா இந்த ஃபேஸ் வாஷ் பவுடரை நீங்களும் முயற்சி செய்து பாருங்க!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“