சரும அழகைப் பராமரிப்பதில் பலரும் அறியாமலேயே சில தவறுகளைச் செய்கிறார்கள். குறிப்பாக, வினிகர் மற்றும் எலுமிச்சை போன்றவற்றை சருமத்திற்குப் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது. இவை சருமத்தைப் பொசுக்கிவிடும், என்று எச்சரிக்கிறார் டாக்டர் அர்ச்சனா.
அப்படியானால், நமது சருமத்தைப் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க என்னதான் வழி? இதோ டாக்டர் அர்ச்சனாவின் எளிய மற்றும் பயனுள்ள ஆலோசனைகள்:
ஓட்ஸ்
சருமத்தைப் பாதுகாப்பாகவும், மென்மையாகவும் வைத்திருக்க ஓட்ஸ் ஒரு சிறந்த வழி.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/03/22/jZ5vYXB1h53vVgLDfWvf.jpg)
ஓட்ஸ் மாஸ்க் பயன்படுத்தும் போது, அதை மிக நைசான பவுடராக அரைக்க வேண்டும். அதாவது, உங்கள் கைகளில் தேய்க்கும் போது மணல் போன்று சொரசொரப்பாக இல்லாமல், மிகவும் மென்மையாக இருக்க வேண்டும்.
இந்த ஓட்ஸ் பவுடரை தண்ணீருடன் கலந்து முகத்தில் தடவி, சுமார் 10 நிமிடங்கள் கழித்து கழுவினால், சருமம் மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறும். இது சருமத்திற்கு எந்தவித எரிச்சலையும் ஏற்படுத்தாது.
கண்களுக்கு குளிர்ச்சி தரும் எளிய வழிகள்
கண்களின் சோர்வைப் போக்கவும், கருவளையங்களைப் போக்கவும் நாம் காலம் காலமாகப் பயன்படுத்தி வரும் ஒரு எளிய வழி வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களின் மேல் வைப்பது. இது கண்களுக்கு உடனடி குளிர்ச்சியையும், புத்துணர்ச்சியையும் அளிக்கும்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/24Ol53fZIT3iosw8RVT3.jpg)
வெள்ளரிக்காயைத் தவிர, கிரீன் டீயும் கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். கிரீன் டீயில் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. கிரீன் டீயை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, குளிரவைத்து, ஃபிரிட்ஜில் வையுங்கள். இந்த குளிர்ந்த கிரீன் டீயை பஞ்சில் நனைத்து, கண்களின் மேல் பத்து நிமிடங்கள் வைத்திருங்கள். இது கண்களின் வீக்கத்தைக் குறைத்து, சோர்வைப் போக்க உதவும். கிரீன் டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கண்களுக்குக் கீழ் ஏற்படும் கருவளையங்கள் மற்றும் பஃபினஸ் போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும்.
இந்தக் குறிப்புகளைப் பின்பற்றி உங்கள் சருமத்தையும், கண்களையும் ஆரோக்கியமாகப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.