/indian-express-tamil/media/media_files/2025/05/27/qY4QuFgIMLI3NCSH4Hmn.jpg)
சரும பராமரிப்பின் முக்கியத்துவம் குறித்து இன்றைய சூழலில் பலருக்கும் ஒரு விழிப்புணர்வு இருக்கிறது. ஏனெனில், இவை அழகு சார்ந்த விஷயமாக இல்லாமல், ஆரோக்கியம் தொடர்புடையதாக இப்போது மக்கள் கருதுகின்றனர்.
ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்ற வகையில் ஒரு சரும பராமரிப்பு முறையை பின்பற்றுகின்றனர். சிலர் கடைகளில் இருந்து ஃபேஸ் க்ரீம், சீரம், டோனர் போன்ற பொருட்களை வாங்கி உபயோகிக்கின்றனர். ஆனால், இவற்றில் இருக்கும் இரசாயனம் வேறு ஏதேனும் ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்ற தயக்கம் சிலரிடம் இருக்கிறது.
அந்த வகையில் வீட்டில் இருக்கும் சிம்பிளான பொருட்களை பயன்படுத்தி சரும பராமரிப்பு முறையை எவ்வாறு பின்பற்றலாம் என்று காணலாம். இதற்காக முதலில் சிறிய அளவில் காட்டன் எடுத்து, அதனை பாலில் நனைத்து நம்முடைய முகத்தை நன்றாக துடைக்க வேண்டும். இப்படி செய்யும் போது முகத்தில் இருக்கும் டெட் செல்கள், அழுக்குகள் அனைத்தும் நீங்கி விடும். இதனை க்ளென்சிங் என்று கூறுகின்றனர்.
இதையடுத்து, ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டு துண்டுகளாக வெட்டி அதன் ஒரு பாதியை கொண்டு முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்த பின்னர் 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடலாம். இனி இறுதியாக ஒரு ஃபேஸ்பேக் தயாரிக்க வேண்டும்.
அதன்படி, ஒரு சிறிய கப்பில் தயிர் எடுத்து அதில் மற்றொரு பாதி எலுமிச்சை சாறை பிழிந்து விட்டு, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலக்க வேண்டும். இந்த ஃபேஸ்பேக்கை முகம், கழுத்து மற்றும் கைகளில் கூட தடவலாம். இதற்கடுத்து சுமார் 15 நிமிடங்களுக்கு பின்னர் கழுவி விடலாம். இதன் மூலம் நம்முடைய முகம் மேக்கப் இல்லாமலே பொலிவாக மாறி இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.