பளபளப்பான சருமத்திற்கு புதினா, இஞ்சி, வெள்ளரி.. இப்படி சாப்பிடுங்க! ஊட்டச்சத்து நிபுணர் பகிரும் ரகசியம்!

புதினா, இஞ்சி, வெள்ளரி மற்றும் சியா விதைகளின் கலவையை வழக்கமாக உட்கொள்ளும் போது, "அற்புதமான தோல் முடிவுகளை" காண்பிக்கும்.

புதினா, இஞ்சி, வெள்ளரி மற்றும் சியா விதைகளின் கலவையை வழக்கமாக உட்கொள்ளும் போது, "அற்புதமான தோல் முடிவுகளை" காண்பிக்கும்.

author-image
WebDesk
New Update
Skin care tips

Skin care tips Nutritionist shares natural concoction for glowing skin

ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது மற்றும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலை’ பாதுகாப்பது மட்டுமல்லாமல், சருமத்தையும், முடியையும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. நீங்களும், உங்கள் அழகை மேம்படுத்த விரும்பினால், எங்களிடம் ஒரு மிக எளிதான வீட்டு வைத்தியம் உள்ளது, அதை நீங்கள் முயற்சி செய்யலாம்.

Advertisment

ஊட்டச்சத்து நிபுணர் நிதி குப்தா’ சமீபத்தில் இன்ஸ்டாகிராமில்’ சருமத்தை பளபளபாக்கும், ஒரு இயற்கையான ஜூஸ் ரெசிபியை பகிர்ந்து கொண்டார்,

குப்தாவின் கூற்றுப்படி, புதினா, இஞ்சி, வெள்ளரி மற்றும் சியா விதைகளின் கலவையை வழக்கமாக உட்கொள்ளும் போது, ​​"அற்புதமான தோல் முடிவுகளை" காண்பிக்கும்.

Advertisment
Advertisements

ஒவ்வொரு பொருளின் பண்புகளையும் குப்தா பட்டியலிட்டார்!

*புதினாவில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன, அவை முகப்பருவை எதிர்த்துப் போராடவும், சருமத்தை புத்துணர்ச்சியுடன் உணரவும் உதவும். குறிப்பாக கோடையில், புதினா தண்ணீரைத் தொடர்ந்து குடிப்பதால்’ சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

* இஞ்சியில் 40 க்கும் மேற்பட்ட ஆக்ஸிஜனேற்றங்கள் நிரம்பியுள்ளன, இது வயதான அறிகுறிகளை எதிர்த்துப் போராடுவதாகக் கூறப்படுகிறது. இஞ்சி நச்சுகளை வெளியேற்றுவதன் மூலம் சருமத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல், இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது.

*வெள்ளரியில் இருக்கும் தண்ணீர்’ சருமத்தை உள்ளே இருந்து மென்மையாக்க உதவும். நச்சுகளை வெளியேற்றி, உடல் நீரேற்றத்துடன் இருக்கவும், ஆரோக்கியமான நிறத்தை பராமரிக்கவும் உதவுகிறது. வெள்ளரியில் பாந்தோதெனிக் அமிலம் அல்லது வைட்டமின் பி-5 அதிகமாக உள்ளது, இது முகப்பருவுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.

*சியா விதைகள் பசியை அடக்கி உங்களை நிறைவாக வைத்திருக்கும். உடலை குளிர்ச்சியாக்கும். இது ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 ஆகியவற்றின் ஆதாரமாகவும் உள்ளது.

எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்

புதிய புதினா இலைகள்

தோல் நீக்கிய இஞ்சி- சில துண்டுகள்

வெள்ளரி- சில துண்டுகள்

ஊறவைத்த சியா விதைகள்

முறை

*ஒரு பிளெண்டரில், புதினா இலைகள், இஞ்சி மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து அரைக்கவும்.

*இந்த சாறுடன், ஊறவைத்த சியா விதைகளை சேர்த்து பருகுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: