Advertisment

சருமம் பிரைட் ஆக வேண்டுமா? இருக்கவே இருக்கு கோதுமை மாவு, ஆட்டா

Skin care : இரண்டு தேக்கரண்டி ஆட்டா மாவு, தயிர் ஆகியவற்றுடன் ஒரு தேக்கரண்டி தேன் ஆகியவற்றை நன்றாக ஒரு பேஸ்ட் போல கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பூச வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
skincare, skincare tips, skincare in lockdown, skincare using aata, wheat flour and skincare, face packs using wheat flour, DIY face packs, indian express, indian express news, skincare news, skincare news in tamil, skincare latest news, skincare latest news in tamil

skincare, skincare tips, skincare in lockdown, skincare using aata, wheat flour and skincare, face packs using wheat flour, DIY face packs, indian express, indian express news, skincare news, skincare news in tamil, skincare latest news, skincare latest news in tamil

உங்கள் சரும வகைக்கு ஏற்ற ஒன்றைக் கண்டுபிடிப்பதற்கு முன் நீங்கள் நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டியிருக்கும். ஊரடங்கு காலத்தில் மக்கள் அதைத் தான் செய்துக் கொண்டிருக்கின்றனர். அழகு நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில் சருமத்தை ஆரோக்கியமாகவும் இயற்கை பொலிவுடன் வைக்க எளிமையான வழிகளை மக்கள் தேடுகின்றனர். சப்பாத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படும் ஆட்டா அல்லது கோதுமை மாவு உங்கள் சருமத்தை அழகாக வைக்க உதவும் என நாங்கள் சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். ஆனால் அது தான் உண்மை.

Advertisment

முழு கோதுமையில் நிறைய நார்ச்சத்துகள் உள்ளது என்று நம்பப்படுகிறது. அது தவிர தேவையான வைட்டமின்கள் மற்றும் துத்தநாகம், செலினியம் (selenium), மாங்கனீசு (manganese) ஆகிய தாதுக்களும் அடங்கி உள்ளது. கடலைமாவை முகத்தில் தேய்ப்பது போல ஆட்டாவையும் முகத்தில் பூசலாம். இது சருமத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கை எதிர்த்து போராடும். மேலும் நச்சுக்கள், முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் ஆகிய பிரச்சனைகளையும் போக்கும். இது சருமத்தின் அமைப்பை மேம்படுத்தி இறுக்கமாக்குவதாக அறியப்படுகிறது. எனவே இதை உங்கள் சரும பராமரிப்பு வழக்கத்துக்கு பயன்படுத்தலாம்.

* இரண்டு தேக்கரண்டி ஆட்டா மற்றும் பால் ஆகியவற்றை எடுத்து அதை நன்றாக ஒரு பேஸ்ட் பருவத்தில் கலந்துக் கொள்ளவும். இதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பூசி 15-20 நிமிடங்கள் உலரவிடவும். பிறகு தண்ணீர் கொண்டு கழுவிவிட்டு வித்தியாசத்தை நீங்களே பார்க்கலம்.

* மேலும் சரும அலர்ச்சியை போக்க இந்த பேஸ்டுடன் சிறிது ரோஸ் வாட்டரையும் சேர்த்து கொள்ளலாம். அதிக நேர வேலை மற்றும் கணிணி திரையை அதிக நேரம் பார்த்துக் கொண்டே இருப்பதால் உங்கள் சருமத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. ரோஸ் வாட்டர் சருமத்துக்கு புத்துணர்ச்சி ஊட்டக்கூடியது. ஆட்டா மாவு, பால் மற்றும் சிறிது ரோஸ் வாட்டரை சேர்த்து ஒரு பேஸ்ட் செய்து அதை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் பூசவும். இது முகத்தை நன்றாக சுத்தம் செய்யும்.

* கோடை காலத்தில் சருமத்திற்கு போதிய நீர்ச்சத்து தேவைப்படுகிறது. அதிக வேர்க்க கூடியவர்கள் குளிர்சாதன அறையில் அமர்ந்து தங்களை குளிர்வித்துக் கொள்வர். இப்படி செய்வது தோலில் உள்ள அத்தியாவசிய ஊட்டங்களை அகற்றி அதன் ஆரோக்கியத்தை பாதிக்கும். இதற்கு சரியான தீர்வு தலா இரண்டு தேக்கரண்டி ஆட்டா மாவு, தயிர் ஆகியவற்றுடன் ஒரு தேக்கரண்டி தேன் ஆகியவற்றை நன்றாக ஒரு பேஸ்ட் போல கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பூச வேண்டும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகத்தில் உள்ள முகப்பரு பிரச்சனைகள் நீங்கும். இதை தினமும் செய்யலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Skin Care
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment