ரொம்ப பசிக்கும்போது, அவல் வைத்து இப்படி செய்து சாப்பிடுங்க. செம்ம ருசியா இருக்கும்.
தேவையான பொருட்கள்
1 கப் அவல்
2 ஸ்பூன் நல்லெண்ணை
அரை ஸ்பூன் கடுகு
அரை ஸ்பூன் கடலை பருப்பு
கருவேப்பிலை
2 பச்சை மிளகாய்
பாதி அளவு வெங்காயம்
துருவிய தேங்காய் அரை கப்
தேவையான அளவு உப்பு
செய்முறை: மெலிதான அவலாக இருந்தால், அதை 3 முறை நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும். தடிமனாக இருந்தால், அதை நாம் ஊற வைக்க வேண்டும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தொடர்ந்து, இதை அவலில் கொட்டவும், இத்துடன் தேங்காய் துருவலை சேர்க்கவும். உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். தற்போது உருண்டைகளாக மாற்றி, அதை இட்லி பாத்திரத்தில் வேக வைத்து எடுக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“