கோவை, பன்னிமடையைச் சேர்ந்தவர் நாகலட்சுமி. இவர் நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஊழியர் ஆக வேலை பார்த்து வருகிறார். கல்லூரிக்கு தினமும் வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்று வருவார்.
நேற்று மழை பெய்த நிலையில் மோட்டார் சைக்கிளை வீட்டு அருகில் நிறுத்தி இருந்தார். பிறகு வெளியில் செல்வதற்காக மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு அவிநாசி ரோட்டில் சென்றார்.
அங்கு உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்புவதற்காக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சீட்டை திறந்தார். அப்போது பச்சை நிறத்தில் நீளமான ஒன்று ஏதோ இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பெட்ரோல் பங்க் ஊழியர் பாம்பு என்று சத்தம் போட்டதும், மோட்டார் சைக்கிளை அப்படியே விட்டு விட்டு அங்கு இருந்து ஓடி விட்டார். சீட்டுக்குள் ஒளிந்து இருந்த பாம்பு தானாக வெளியேறி பெட்ரோல் பங்க் வளாகத்தில் உர்ந்து சென்று அருகில் உள்ள காலி இடத்திற்கு சென்று விட்டது.
நாகலட்சுமி வீட்டு அருகில் கால் இடங்கள் உள்ளன. தற்போது பெய்த மழையில் அதற்குள் இருந்த பாம்பு, வெப்பத்திற்காக மோட்டார் சைக்கிள் மீது ஏறி சீட்டுக்கு அடியில் பதுங்கி இருந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
மோட்டார் சைக்கிள் சீட்டை நாகலட்சுமி பிறந்த போது ஏதோ ? கயிறு என்று நினைத்து அதை முதலில் தூக்க நினைத்து உள்ளார். பிறகு பச்சை பாம்பு என்று தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்து விட்டார். அதன் பிறகு பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அவரை ஆசிவாசப்படுத்தி அங்கு இருந்து அனுப்பி வைத்தனர்.
காலியிடங்கள் நிறைந்த பகுதி அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தினால் எடுக்கும் போது பார்த்து எடுக்க வேண்டும் என்று அறிவுரை கூறினர்.