இந்த முறையில் புடலங்காய் கூட்டு வைத்தால். செம்ம ருசியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
புடலங்காய்- 300 கிராம்
கடலை பருப்பு – 3 டேபிள் ஸ்பூன்
பாசி பருப்பு – 1 ½ டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 3
பூண்டு இடித்தது 12
சீரகம்- 1 ½ டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி – ¼ டேபிள் ஸ்பூன்
மிளகாய் பொடி – ¼ டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி பொடி – 1/ 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/ 4 டெபிள் ஸ்பூன்
தேங்காய் – 1 மூடி
உப்பு
செய்முறை: பச்சை மிளகாய், தேங்காய், சீரகத்தை சேர்த்து அரைத்துகொள்ளவும். அதிக நைசாக அரைக்க வேண்டாம். கடலை பருப்பு, பாசி பருப்பை, மஞ்சள் பொடி, தக்காளி, கருவேப்பில்லை சேர்த்து வேக வைத்து எடுத்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம், வத்தல் சேர்க்கவும், இடித்த பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். மீதிம் உள்ள தக்காளி, புடலங்காய் நறுக்கியதை சேர்த்து வதக்கவும். தொடர்ந்து மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மல்லிப் போடி சேர்க்கவும். தொடர்ந்து அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும். இதை நன்றாக கிளர வேண்டும். கடைசியாக அவித்த பருப்பை சேர்த்து கிளரவும். தொடர்ந்து உப்பு சேர்த்து கிளரவும். கல்யாண வீட்டு புடலங்காய் கூட்டு ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“