பாம்பு vs சிலந்தி: இந்த ரெண்டுல விஷம் எதுக்கு அதிகம்? யாருக்கும் தெரியாத உண்மைகள்!

பாம்பு மற்றும் சிலந்தியில் எதற்கு அதிக விஷம் இருக்கிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பாம்பு மற்றும் சிலந்தியில் எதற்கு அதிக விஷம் இருக்கிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
snake

பாம்புகளும் சிலந்திகளும் மனிதர்களிடையே மிகவும் பயத்தை உண்டாக்கும் உயிரினமாகும். இரண்டும் விஷத்தன்மை கொண்டவையாகும். எனினும் மனிதர்கள் மீதான தாக்கம் இரண்டிற்கும் வேறுபடுகிறது.
பாம்புகள் ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் பல்லாயிரக்கணக்கானோரின் இறப்புக்குக் காரணமாகின்றன. குறிப்பாக மருத்துவ வசதி குறைவாக உள்ள கிராமப்புறப் பகுதிகளில் இது அதிகமாக உள்ளது. ஆனால், சிலந்தி கடியால் ஏற்படும் மரணங்கள் மிகவும் அரிதானவை.

Advertisment

பாம்புகள் உலகம் முழுவதும் காணப்படுகின்றன. இதுவரை சுமார் 3,800 வகையான பாம்பு இனங்கள் அறியப்பட்டுள்ளன. இவற்றில் கிட்டத்தட்ட 600 இனங்கள் விஷத்தன்மை கொண்டவை. பெரும்பாலான பாம்புக்கடிகள் உயிரிழப்பை ஏற்படுத்தாவிட்டாலும் கடுமையான காயத்தை ஏற்படுத்தும். உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, பாம்புகடிகள் மூலம் ஆண்டுதோறும் 94,000 முதல் 1,25,000 பேர் உயிரிழப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், இந்த உயிரிழப்புகள் பெரும்பாலும் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவின் கிராமப்புறப் பகுதிகளிலேயே நிகழ்வதாக கூறப்படுகிறது.

பாம்புகள் பொதுவாக அவற்றின் இனம் மற்றும் வாழ்விடத்தைப் பொறுத்து பகல் நேரத்திலோ அல்லது இரவு நேரத்திலோ அதிகச் சுறுசுறுப்புடன் செயல்படும். அவை பெரும்பாலும் தற்காப்புக்காகவே தாக்குகின்றன. உலகளவில் சுமார் 51,000 இனங்களுடன் சிலந்திகள் பாம்புகளை விட மிகவும் அதிகமாக உள்ளன. இருப்பினும், அவற்றில் சுமார் 20 இனங்கள் மட்டுமே குறிப்பிடத்தக்க கடியை ஏற்படுத்தும் திறன் கொண்டவை. சிலந்திக் கடியால் ஏற்படும் உயிரிழப்புகள் மிக மிக அரிதானவை. 

சிலந்திக்கும் பாம்பிற்கும் உள்ள வேறுபாடுகள்

 பாம்புகள் பெரும்பாலும் கிராமப்புறம் அல்லது புறநகர்ப் பகுதிகளில் மனிதர்களுக்கு அருகாமையில் வாழ்கின்றன. இதனால் தற்காப்புக்காக அவை எதிர்பாராத விதமாகத் தாக்கும் அபாயம் உள்ளது. மாறாக, சிலந்திகள் பொதுவாகத் தனிமையை விரும்புபவை மற்றும் மனிதத் தொடர்பைத் தவிர்க்கின்றன. எனவே, சிலந்தி கடிகள் மிகவும் குறைவாகவே ஏற்படுகின்றன.

Advertisment
Advertisements

விஷத்தன்மை செலுத்தும் முறை

பாம்புகள் நீண்ட, உள்ளீடற்ற விஷப் பற்களைக் கொண்டுள்ளன. இவை ஒரே கடியில் அதிக அளவு விஷத்தைச் செலுத்தக்கூடியவை. விஷம் விரைவாகச் செயல்பட்டு, அந்தந்த இனத்தைப் பொறுத்து நரம்பு மண்டலம், இரத்த உறைதல் அல்லது திசுக்களைப் பாதிக்கலாம். இந்த அதிக அளவிலான விஷம் செலுத்தப்படுவதால், ஒரு பாம்புக்கடி கூட உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியதாக மாறுகிறது.

ஆனால், சிலந்திகளுக்கு மிகவும் சிறிய விஷப் பற்களே உள்ளன.  மேலும் அவை மிகச் சிறிய அளவிலேயே விஷத்தைச் செலுத்துகின்றன. அவற்றின் விஷம் பொதுவாகச் சிறிய இரையைப் பிடித்துச் செயலிழக்கச் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, சிலந்திக் கடிகள் வலி, எரிச்சல் அல்லது பொதுவான அறிகுறிகளை ஏற்படுத்தினாலும், உயிரிழப்புகளை ஏற்படுத்துவதில்லை.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: