நாம் வழக்கமாக ஊறவைத்த பாதாமைதான் எடுத்துக்கொள்வோம். இந்நிலையில் வால்நட்டையும் நாம் அப்படி ஊற வைத்து சாப்பிடலாம் என்று தற்போது கூறப்படுகிறது.
வால்நட்டை நாம் இரவில் ஊறவைத்து அடுத்த நாள் சாப்பிட்டால், அதில் உள்ள பைடிக் தன்மை குறையும். இந்த பைடிக் தன்மை உணவில் உள்ள கால்சியம், இரும்பு சத்து, ஜிங்க் ஆகியவற்றை உடல் எடுத்துக்கொள்வதை தடுக்கும்.இந்நிலையில் வால்நட்டை ஊற வைக்கும்போது, அது நன்றாக ஜீரணமாகும், மேலும் அதில் உள்ள சத்துகள் உடலில் சேரும்.
மேலும் ஊறவைப்பதால், வால்நட்டில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு சத்து, ஆண்டி ஆக்ஸிடண்ட் உடலில் சேரும்.
இதில் உள்ள மெக்னீஷியம், மான்கனீஸ் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு சத்து இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும். மேலும் ஊறவைத்த வால்நட் சாப்பிடுவதால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறையும்.
அஜீரணம், குடல் ரீதியான பிரச்சனை இருப்பவர்கள், வால்நட்டை ஊறவைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. எளிதாக ஜீரணமாகும்.
ஊறவைப்பதால் வால்நட்டில் உள்ள கசப்பு தன்மை நீங்கிவிடும். பல்லில் பிரச்சனை உள்ளவர்கள், ஊறவைத்தால் வால்நட்டை நம் எளிதாக கடித்து சாப்பிட முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“