இந்த சோயா தோசையில் அதிக சத்துகள் இருக்கிறது. மேலும் இது வழக்கமான தோசை போல் இல்லாமல் கூடுதல் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
புழுங்கலரிசி – 1 கப்
காய்ந்த சோயா- 2 டேபிள் ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – சிறிதளவு
சின்ன வெங்காயம் – 8
பச்சை மிளகாய் -2
செய்முறை: அரிசி, சோயா, உளுந்தம் பருப்பை கழுவி தனித்தனியாக 3 முதல் 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். உப்பு சேர்த்து மூன்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 10 மணி நேரம் மாவு புளிக்க வைக்க வேண்டும். நறுக்கிய சின்ன வெங்காயம், மிளகாய் சேர்த்து மெல்லிய தோசைகளாக சுட்டு எடுக்கவும். சுவையிலும் இந்த தோசை சூப்பராக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“