காய்கறி இல்லாதபோது, இப்படி குழம்பு செய்யுங்க. ஈசியான ரெசிபியும் கூட.
தேவையான பொருட்கள்
¼ கப் கடலை மாவு
உப்பு
மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்
கால் டீஸ்பூன் பெருங்காயப் பொடி
1 கப் தயிர்
1 கப் தண்ணீர்
4 பச்சை மிளகாய்
இஞ்சி சிறிய அளவு
2 டீஸ்பூன் எண்ணெய்
கடுகு 1 டீஸ்பூன்
கால் டீஸ்பூன் வெந்தயம்
அரை டீஸ்பூன் சீரகம்
1 கொத்து கருவேப்பிலை
1 ஸ்பூன் நெய்
அரை ஸ்பூன் சீரகம்
4 வத்தல்
அரை ஸ்பூன் மிளகாய் தூள்
1 கப் பூந்தி
செய்முறை: ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, உப்பு, தயிர், தண்ணீர், மஞ்சள் பொடி, பெருங்காயம் சேர்த்து கலந்து கொள்ளவும். பச்சை மிளகாய், இஞ்சியை சேர்த்து இடித்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்க்கவும், அதில் கடுகு, வெந்தயம், சீரகம், கருவேப்பிலை சேர்த்து கிளர வேண்டும். இதில் கரைத்த கடலை மாவு கரைசலை சேர்க்கவும். அதில் கொஞ்சம் அதிகமாக தண்ணீர் சேர்க்கவும். தனி பாத்திரத்தில் நெய் சேர்த்து, சீரகம், வத்தல், மிளகாய் தூள் சேத்து தாளித்து குழம்பில் கொட்டவும். 12 நிமிடங்கள் கழித்து பூந்தி சேர்த்து கிளரவும். சூப்பரான குழம்பு ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“