Senthoora Poove Srinidhi: விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், ‘செந்தூரப்பூவே’ சீரியலில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் ஸ்ரீநிதி.
பல தடைகளை தாண்டி ரோஜா கழுத்தில் தாலி கட்டிய துரை சிங்கம்!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இவர், 1999-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் நாள் பிறந்தார். இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையில் பணியாற்றி வருகிறார். திருவனந்தபுரத்தில் தனது பள்ளிப்படிப்பை முடித்த அவர், சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் பட்டம் பெற்றார். ’மலர்வாடி’ என்ற தொலைக்காட்சி சீரியல் மூலம் தான் முதலில் அறிமுகமானார் ஸ்ரீநிதி. இந்த சீரியலில் இவர் கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மலையாள தொடரான இதனை சுதீஷ் சங்கர் இயக்கியிருந்தார். சீரியல் ஃப்ளவர்ஸ் சேனலில் ஒளிபரப்பாகியிருந்தது.
சன் லைப்பில் ஒளிபரப்பான ஜிமிக்கி கம்மல் தான் ஸ்ரீநிதியின் முதல் தமிழ் அறிமுகம். அதுமட்டுமல்லாமல் மலபார் லவ் 4, நிரமசக் 2 புகழ்பெற்ற ஆல்பங்களிலும்ன் ஸ்ரீநிதி நடித்துள்ளார். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, ‘தறி’ என்ற தொடரிலும் ஹீரோயினாக நடித்திருந்தார். தவிர ‘சயபென்சில்’ என்ற மலையாள படத்திலும், ‘நாங்களும் நல்லவங்க தான்’ என்ற தமிழ் படத்திலும் நடித்தார். ஆனால் சில காரணங்களால் இவ்விரு படங்களும் பாதியிலேயே நிறுத்தப்பட்டன.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் நடிகர் ரஞ்சித்துடன் இவர் ஜோடியாக நடித்து வருகிறார். இந்த கதை 40 வயது உடைய ஒரு ஆணுக்கும் 25 வயது உடைய ஒரு பெண்ணுக்கும் இடையேயான காதலை பற்றிச் சொல்லும் ஒரு ரொமான்டிக் டெலிவிஷன் தொடராக எடுக்கப்பட்டு வருகிறது.
ஹவுஸ் மேட்ஸ் பொழுது போக்க பிபி எஃப் எம்!
ஸ்ரீநிதியின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, அவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை. அதோடு டிக் டாக் வீடியோக்களில் அதிக நேரத்தை செலவிட்டு வந்த அவர், தற்போது அதனை ரொம்பவும் மிஸ் பண்ணுகிறாராம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.