திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா ராப்பத்து உற்சவத்தின் 8-ம் திருநாளான இன்று மாலை திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
/indian-express-tamil/media/post_attachments/1d1a95d1-7d0.jpg)
உற்சவர் நம்பெருமாள் சந்தனு மண்டபத்திலிருந்து மாலை 5 மணிக்கு தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பட்டு, ஆரியபடாள் வாயில் வழியாக கோயிலின் 4-ம் பிரகாரத்தில் உள்ள மணல் வெளிக்கு வந்தார். அங்கு ஓடியாடி வையாளி கண்டருளினார். இதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 7.30 மணியளவில் திருமாமணி ஆஸ்தான மண்டபத்தை அடைந்து பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார் ஶ்ரீநம்பெருமாள்.
/indian-express-tamil/media/post_attachments/6e33ad71-4c8.jpg)
முன்னதாக, திருமாலுக்குத் தொண்டு செய்தே தனது செல்வங்களை எல்லாம் இழந்தவன் திருமங்கை மன்னன். அந்தளவிற்குப் பெருமாளின் மீது அளவு கடந்த பக்தி கொண்ட திருமங்கை மன்னன், தனது பெருமாள் கைங்கர்யம் தொடர, வழிப்பறியில் ஈடுபட்டார்.
/indian-express-tamil/media/post_attachments/06cfd338-80d.jpg)
அப்படி ஒருநாள் திருமங்கை மன்னன் வழிப்பறியில் ஈடுபட்டபோது, பெருமாளே நேரில் தோன்றி சிறிதுநேரம் விளையாட்டுக் காட்டிவிட்டு அவரது காதில் 'ஓம்நமோ நாராயணாய' எனும் மந்திரத்தைச் சொல்லிய நிகழ்வு வேடுபறி வைபவத்தின் ஒருபகுதியாக பக்தர்கள் முன்னிலையில் நடத்திக் காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
/indian-express-tamil/media/post_attachments/da669765-ba6.jpg)
செய்தி: க.சண்முகவடிவேல்