Advertisment

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி: முத்து சாயக்கொண்டையில் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து உற்சவத்தின் 8ம் நாளான இன்று காலை நடைபெறுகிறது.  திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி பிரபந்திற்காக, நம்பெருமாள் மஞ்சள் பட்டு அணிந்து, முத்து சாயக் கொண்டை அணிந்து வந்தார். 

author-image
WebDesk
New Update
srirangam vaikunta ekadasi 2025 pagal pathu 8th day namperumal Tamil News

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து உற்சவத்தின் 8ம் நாளான இன்று காலை நடைபெறுகிறது.  திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி பிரபந்திற்காக, நம்பெருமாள் மஞ்சள் பட்டு அணிந்து, முத்து சாயக் கொண்டை அணிந்து வந்தார். 

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து உற்சவத்தின் 8ம் நாளான இன்று (07.01.2025) காலை நடைபெறுகிறது.  திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி பிரபந்திற்காக, நம்பெருமாள் மஞ்சள் பட்டு அணிந்து, முத்து சாயக் கொண்டை அணிந்து வந்தார். 

Advertisment

அதில் நெற்றி சுட்டிப்பூ சாற்றி, மகர கர்ண பத்திரம்; வைர அபய ஹஸ்தம், திரு மார்பில் பங்குனி உத்திர பதக்கம், சிகப்புக் கல் சூர்ய பதக்கம்; அதன் கீழ் சிகப்பு கல் அரசிலை பதக்கம்; சிகப்புக் கல் அடுக்கு மகர கண்டிகை ஹாரங்கள் ; 6 வட (18 பிடி) முத்து சரம் அணிந்து வந்தார். 

பின்புறம், முத்துக் கபா (முத்து அங்கி) தங்க தண்டைகள் திருவடியில் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்தில் சேவை சாதித்து வருகிறார்.

செய்தி: க.சண்முகவடிவேல்.

Srirangam Ranganathaswamy Temple srirangam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment