கீறல் ஆகும் அளவுக்கு தேய்க்க வேண்டாம்; 2 பொருள் போதும்… கறைப்பிடித்த பாத்திரத்தை ஈஸியா கிளீன் பண்ணலாம்!
இப்படி மறந்துவிடுவதால், பாத்திரம் முழுவதும் பால் கருகி, அதைச் சுத்தம் செய்வது பெரும்பாடாக மாறிவிடும். கருகிய பால் பாத்திரங்களை தூக்கி எறியாமல், அவற்றை மீண்டும் பளபளப்பாக்க ஒரு எளிய வழி இருக்கிறது.
இப்படி மறந்துவிடுவதால், பாத்திரம் முழுவதும் பால் கருகி, அதைச் சுத்தம் செய்வது பெரும்பாடாக மாறிவிடும். கருகிய பால் பாத்திரங்களை தூக்கி எறியாமல், அவற்றை மீண்டும் பளபளப்பாக்க ஒரு எளிய வழி இருக்கிறது.
பாலைக் காய்ச்சிவிட்டு அடுப்பிலேயே வைத்து மறந்துவிடுவது என்பது சாதாரணமாக நடக்கும் ஒரு தவறு. இப்படி மறந்துவிடுவதால், பாத்திரம் முழுவதும் பால் கருகி, அதைச் சுத்தம் செய்வது பெரும்பாடாக மாறிவிடும். கருகிய பால் பாத்திரங்களை தூக்கி எறியாமல், அவற்றை மீண்டும் பளபளப்பாக்க ஒரு எளிய வழி இருக்கிறது. இதற்குத் தேவையான பொருட்கள் வெறும் இரண்டுதான்.
Advertisment
தேவையான பொருட்கள்
பாத்திரம் கருகிய அளவுக்குத் தண்ணீர்
ஒரு ஸ்பூன் சமையல் சோடா
Advertisment
Advertisements
சிறிதளவு டிஷ் வாஷ் லிக்விட்
சுத்தம் செய்யும் முறை
கருகிய பால் பாத்திரத்தில், கருகிய பகுதி முழுவதையும் மூழ்கடிக்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றவும்.
ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவைச் சேர்த்து, அதனுடன் சிறிதளவு பாத்திரம் தேய்க்கும் திரவத்தையும் சேர்க்கவும்.
இந்தக் கலவையை நன்கு கலந்துவிட்டு, அடுப்பில் வைத்து ஆன் செய்யவும்.
சமையல் சோடா சேர்த்திருப்பதால், கலவை பொங்கி வரும். ஒரு கரண்டி அல்லது ஸ்பூன் வைத்து, பொங்கும்போது கிளறிக்கொண்டே இருங்கள். இல்லையெனில், அது வழிந்துவிடும்.
பொங்குவது குறைந்ததும், மூன்று நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும். இப்படிச் செய்வதால், கருகிய பால் படிந்திருக்கும் கரை தானாகவே உருகி வரத் தொடங்கும்.
மூன்று நிமிடங்கள் கொதித்த பிறகு, அடுப்பை ஆஃப் செய்து, பாத்திரத்தை ஒரு மூடியால் மூடி, ஐந்து நிமிடங்கள் அப்படியே விடவும். இது கறையை மேலும் இலகுவாக்கும்.
ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, தண்ணீரின் நிறம் மாறியிருப்பதைக் காணலாம். சூடாக இருக்கும்போதே, பாத்திரத்தைச் சுத்தம் செய்யத் தொடங்கவும்.
சிறிதளவு பாத்திரம் தேய்க்கும் திரவம் அல்லது சோப்புடன் ஸ்டீல் ஸ்க்ரப்பரைப் பயன்படுத்தித் தேய்க்கவும். கருகிய கறைகள் எளிதாக நீங்கி, பாத்திரம் மீண்டும் பளபளப்பாக மாறிவிடும்.